மத்திய அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய விதி – விரிவான விளக்கம்!
மத்திய அரசு ஊழியர்களை சார்ந்தவர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கு 7 ஆண்டுகள் வரை சேவை விதி ரத்து செய்யப்படுவதாகவும், இதற்கு முன்னாக அந்த ஊழியர் இறக்க நேரிட்டால் அவரது குடும்பத்திற்கு 50% ஓய்வூதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதிய திட்டம்
கொரோனா நோய் தொற்று காரணமாக, கடந்த 3 தவணைகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) திரும்ப கொடுப்பதாக அறிவிக்கப்பட்டதன் மூலம் சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 61 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைய உள்ளனர். இந்நிலையில் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு புதிய விதி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தின்படி, அரசு ஊழியர்களை சார்ந்தவர்கள், ஓய்வூதியம் பெறுவதற்கான 7 ஆண்டு சேவை விதி ரத்து செய்யப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் பக்தர்கள் கவனத்திற்கு – ஆகஸ்ட் 15 மீண்டும் திறப்பு!
மேலும் 7 ஆண்டு சேவையை நிறைவு செய்வதற்கு முன்பு அந்த ஊழியர் இறக்க நேரிட்டால் அவரது குடும்பத்திற்கு 50% ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. முன்னதாக பழைய விதிகளின் கீழ் குடும்ப உறுப்பினர்களுக்கான இந்த ஓய்வூதிய சலுகைகள் கொடுக்கப்படவில்லை. இந்நிலையில் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள 7வது ஊதியக்குழு, மத்திய அரசு ஊழியர்களின் குடும்ப ஓய்வூதிய விதிகளை எளிமைப்படுத்தியுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் மத்திய அரசு ஊழியர்களது குடும்ப ஓய்வூதிய நலனை விரைவாக தீர்க்குமாறு ஓய்வூதிய மற்றும் ஓய்வூதியதாரர்கள் துறை, வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. பல எதிர்பார்ப்புகளுக்கு பிறகு, இறுதியாக மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி (DA) தொகையை மத்திய அரசு 17% முதல் 28% வரை அதிகரித்துள்ளது. இந்த தொகையை திரும்ப வழங்குவதன் மூலம் பல லட்சக்கணக்கான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைந்தாலும், இதனால் அரசுக்கு ஏற்படும் மொத்த செலவு ஆண்டுக்கு ரூ.2.88 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.