சபரிமலை ஐயப்பன் பக்தர்கள் கவனத்திற்கு – ஆகஸ்ட் 15 மீண்டும் திறப்பு!
கேரளாவில் உள்ள சபரிமலை கோயில் நடை கருக்கிடக மாத பூஜைக்காக கடந்த 16ம் தேதி திறக்கப்பட்டது. தற்போது பூஜை முடிவடைந்த நிலையில் இன்று நடை சாத்தப்பட்டது. மீண்டும் அடுத்த மாதம் 15ம் தேதி நடை திறக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சபரிமலை கோவில்:
கேரளாவில் கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்டது. ஆனாலும் கோவில் ஊழியர்கள் மூலம் சுவாமிக்கு தினசரி பூஜைகள், சடங்குகள் ஆகியவை பக்தர்கள் அனுமதியின்றி வழக்கம் போல் நடத்தப்பட்டது. மாதாந்திர பூஜைகளுக்காக மட்டும் நடை திறப்பட்டு வழிபாடு நடைபெற்றது. தற்போது கொரோனா இரண்டாம் அலை குறைந்து வருவதால் ஜூலை 16ம் தேதி நடை திறக்கப்பட்டது.
Airtel, Jio & Vi நிறுவனங்களின் ரூ.500க்கு குறைவான ப்ரீபெய்ட் திட்டங்கள் – முழு விபரம்!
கருக்கிடக மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை ஜூலை 16ம் தேதி மாலை முதல் திறக்கப்பட்டு 5 நாட்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் மற்றும் கொரோனா 2 டோஸ் தடுப்பூசிகள் செலுத்திய சான்று சரிபார்க்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் ஆனி மாத பூஜையின் கடைசி நாளான நேற்று கலச பூஜை நடைபெற்று, நடை சாத்தப்பட்டது.
TN Job “FB Group” Join Now
அதனை தொடர்ந்து வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி ஆவணி மாத பூஜை மற்றும் ஓணம் பண்டிகைக்காக சபரிமலை கோவில் நடை மீண்டும் திறக்கப்படும் என திருவிதாங்கூர் தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே நடைபெற்றது போல முன்பதிவின் படி பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். அடுத்த ஒரு நாளைக்கு மாதம் 10,000 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். பக்தர்கள் தொடர்ந்து அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.