தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் இரண்டு நாட்கள் தொடர் விடுமுறை – பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு!
தமிழகத்தில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு தீபாவளிக்கு அடுத்த நாள் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நவ.5,6 விடுமுறை:
நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் பட்டாசு வெடித்தும், இனிப்பு பண்டங்கள் செய்தும், புத்தாடை உடுத்தியும் தீபாவளியை கொண்டாடியுள்ளனர். இந்த ஆண்டு தீபாவளியை அரசு பாதுகாப்பான முறையில் கொண்டாட பல்வேறு பாதுகாப்பு விதிகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தீபாவளி பண்டிகை முடிந்து உடனே அனைவரும் பணிக்கு செல்ல முடியாது.
நவ.8 முதல் LKG & UKG வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
ஏனெனில் நிறைய மக்கள் வெளியூர்களில் இருந்து தங்களது சொந்த ஊருக்கு வந்து தீபாவளி கொண்டாடியுள்ளனர். அவர்களின் நலன் கருதி தமிழக அரசு தீபாவளிக்கு அடுத்த நாளான இன்று நவ.5 ம் தேதி உள்ளூர் விடுமுறையாக அறிவித்தது. அந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நவ.20 ம் தேதி பணி நாளாக அறிவித்தது. அதனால் இன்று தமிழகத்தில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை: பெட்ரோல், டீசல் விலை சரிவு – வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!
அதனை தொடர்ந்து நாளை நவ.6 (சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதனால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் தீபாவளி தினத்தை தொடர்ந்து 4 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள்.