நவ.8 முதல் LKG & UKG வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!

0
நவ.8 முதல் LKG & UKG வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு - மாநில அரசு அறிவிப்பு!
நவ.8 முதல் LKG & UKG வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு - மாநில அரசு அறிவிப்பு!
நவ.8 முதல் LKG & UKG வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!

கர்நாடகா மாநிலத்தில் வரும் நவம்பர் 8ம் தேதி முதல் LKG மற்றும் UKG மாணவர்களுக்கான பள்ளிகளை திறக்க மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனுடன் இம்மாணவர்கள் முகக்கவசம் அணியத்தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு

நாடு முழுவதும் தற்போது கொரோனா நோய்த்தொற்று குறைந்திருக்க கூடிய சூழலில் பள்ளிகளை திறக்கும் நடவடிக்கையின் இறுதி கட்டமாக கொரோனா நேர்மறை விகிதம் 2%க்கும் குறைவாக உள்ள அனைத்து தாலுகாக்களிலும் எல்கேஜி மற்றும் யுகேஜி ப்ரீ பிரைமரி பள்ளிகளை நவம்பர் 8ம் தேதி முதல் மீண்டும் திறக்க கர்நாடகா அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த நடவடிக்கைகள் மூலம் கர்நாடகாவில் மார்ச் 2020க்குப் பிறகு முதல் முறையாக அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் முழுமையாக செயல்படும்.

ஜெனிக்கு ஆறுதல் சொன்ன பாக்கியா, கோபியை சந்திக்க ராதிகாவின் அம்மா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

கர்நாடகாவில் இதற்கு முன்னதாக அங்கன்வாடிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது ப்ரீ-பிரைமரி பள்ளிகளை மீண்டும் திறக்க அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் நிலையான வழிகாட்டுதல் செயல்பாட்டு நடைமுறையின்படி, ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கட்டாயமாக முகக்கவசங்களை அணிந்திருக்க வேண்டும் என்றும் முழுமையாக கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனுடன் 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் கட்டாயமாக முகக்கவசங்களை பயன்படுத்த வேண்டும் என்றும் மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் முகக்கவசம் அணியாததால் இருமல் அல்லது தும்மலின் போது வாய் மற்றும் மூக்கை மூடுமாறு அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். ஒரு மாணவர் இருமல், காய்ச்சல், சளி, வாசனை அல்லது சுவை உணர்வு இழப்பு போன்ற கொரோனா அறிகுறிகளைக் காட்டினால், அவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

சென்னை: பெட்ரோல், டீசல் விலை சரிவு – வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!

அதே நேரத்தில் ஒரு மாணவருக்கு கொரோனா பாசிட்டிவ் கண்டறியப்பட்டால் அனைத்து குழந்தைகளையும் பரிசோதித்து பள்ளியை தற்காலிகமாக மூட வேண்டும். சுகாதார ஊழியர்களின் அறிவுறுத்தல்களின் அடிப்படையில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படலாம். பள்ளி வளாகங்களை தொடர்ந்து சுத்தப்படுத்த வேண்டும். நுழைவாயிலில் குழந்தைகள் கொரோனா அறிகுறிகளை கொண்டிருக்கிறார்களா என்பதை பரிசோதிக்க வேண்டும். மாணவர்கள் 1 மீ சமூக இடைவெளியை பராமரிக்க வேண்டும்.

குழந்தைகள் வீட்டில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் கொண்டு வர வேண்டும். பள்ளிகளில் வெந்நீர் வசதி இருக்க வேண்டும். குழந்தைகள் உணவு மற்றும் தண்ணீரை தவிர வேறு எந்தப் பொருளையும் வாயில் வைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சானிடைசர்கள் அவர்களுக்கு எட்டாத தூரத்தில் சேமிக்கப்பட வேண்டும். இந்த குழந்தைகளுக்கான வகுப்புகள் வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9 மணி முதல் மாலை 3.30 மணி வரை நடத்தப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!