ஆரோக்கிய அட்டைதாரர்களுக்கு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை – குடும்ப நலத்துறை அறிவிப்பு!
ஆயுஷ்மான் பாரத் -ஆரோக்கிய கர்நாடகா திட்டத்தின் கீழ் பதிவு செய்த அனைவருக்கும் விரைவாகவும் அதே சமயம் பணமில்லாமல் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் சிகிச்சை பெறுவதற்கு ஆயுஷ்மான் ஆரோக்கிய கார்டு மட்டுமே போதும் என்றும் அறிவித்துள்ளன
ஆயுஷ்மான் ஆரோக்கிய கார்டு
இந்தியாவில் வறுமை கோட்டுக்கு கீழுள்ள, பி.பி.எல்., ரேஷன் கார்டுதாரர்கள், வறுமை கோட்டுக்கு மேலுள்ள கார்டுதாரர்களின் மருத்துவ செலவுகளை அரசே ஏற்றுக்கொள்ளும் வகையில் ஆயுஷ்மான் பாரத் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் மூலம் அரசு மற்றும் பதிவு செய்து கொண்ட தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று கொள்ளலாம். தற்போது இத்திட்டத்துடன் இணைந்து கர்நாடக அரசு “ஆயுஷ்மான் பாரத் -ஆரோக்கிய கர்நாடகா” திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் கர்நாடகாவில் 1.5 கோடி பயனாளர்களுக்கு ஆரோக்கிய கார்டு வழங்கப்பட்டுள்ளது.
சபரிமலை செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – கோயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு!
இதன் மூலம் நோயாளிகள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு வரும்போது இந்த ஆரோக்கிய கார்டு காண்பித்தாலே போதும் விரைவாக சிகிச்சை பெற்று விடலாம். ஆனால் தற்போது ஆரோக்கிய கார்டு காண்பித்தாலும் ரேஷன் கார்டு உள்ளிட்ட மற்ற ஆவணங்களையும் மருத்துவமனைகளில் கேட்கின்றனர். இதனால் சிகிச்சை அளிப்பதில் கால தாமதம் ஏற்படுகிறது. இதனை தெரிந்து கொண்ட சுகாதாரத்துறை ஆரோக்கிய கார்டு வைத்திருக்கும் நோயாளிகளுக்கு வேறு எந்த ஆவணங்களையும் தாக்கல் செய்யுமாறு கட்டாயப்படுத்த கூடாது.
விஜய் டிவி முதல் ஜீ தமிழ் வரை டாப் சீரியல்களின் TRP ரேட்டிங் விவரம் – முதலிடத்தில் ‘பாரதி கண்ணம்மா’!
இவ்வாறு மற்ற ஆவணங்களை கேட்டு வலியுறுத்துவதை தடை செய்துள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அத்துடன் ஆரோக்கிய கார்டு வைத்திருக்கும் பயனாளர்களுக்கு முறையான சிகிச்சை உடனடியாக அளிக்காவிட்டால் சம்பந்தப்பட்ட அரசு அல்லது தனியார் மருத்துவமனைகள் மீது சட்டரீதியில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது. இதனால் ஆரோக்கிய கார்டு வைத்திருக்கும் பயனாளர்களுக்கு விரைவாகவும், பணமில்லாமல் இலவசமாகவும் சிகிச்சைகள் வழங்கப்படுகிறது.