சபரிமலை செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – கோயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு!
கேரளா மாநிலத்தில் தொடர்ந்து சில தினங்களாக கனமழை பெய்து வருவதால் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் தரிசனம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதனால் பக்தர்கள் தங்குவதற்கு விதிக்கப்பட்ட தடையை அகற்றி கோயில் சிறப்பு அதிகாரி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சபரிமலை கோயில்:
நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து அனைத்து கோயில்களிலும் பக்தர்களுக்கும் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு பக்தர்கள் சபரிமலைக்கு அனுமதிக்கப்பட்ட போதிலும் உரிய கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி நடக்குமாறு சபரிமலை தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி தினசரி 50 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு தரிசனம் மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் கோவிலில் தங்குவதற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
விஜய் டிவி முதல் ஜீ தமிழ் வரை டாப் சீரியல்களின் TRP ரேட்டிங் விவரம் – முதலிடத்தில் ‘பாரதி கண்ணம்மா’!
கொரோனா பரவலை தொடர்ந்து வடகிழக்கு பருவமழை பெய்து வரும் காரணத்தால் பக்தர்கள் தரிசனம் செய்ய தாமதம் ஏற்பட்டுள்ளது. அதாவது சபரிமலைக்கு செல்லும் வழியில் உள்ள பம்பை நதியில் நீர்வரத்து அதிகம் உள்ளதால் வெளியூரில் இருந்து வந்த பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த தகவலை அறிந்த கோயில் நிர்வாக சிறப்பு அதிகாரி அர்ஜுன் பாண்டி பம்பை நதியின் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
டெல்டா வகை வைரஸ்களை விட இரட்டிப்பாக பரவும் ஓமைக்ரான் – மருத்துவ நிபுணர்கள் தகவல்!!
அத்தகைய ஆய்வுக்கு பின்னர் அவர் மழை பொழிவு இருக்கும் நாட்களில் இரவு நேரங்களில் பம்பையில் தங்கிக்கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கோயில் நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு பக்கதர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மண்டல பூஜை தினத்தை முன்னிட்டு 26ம் தேதி வரை பக்தர்கள் சபரிமலையில் அனுமதிக்கப்படுவர். பின்னர் மகரவிளக்கு பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 30ம் தேதி முதல் ஜனவரி 20ம் தேதி வரை கோயில் நடை மீண்டும் திறக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.