கொரோனா பாதித்த நோயாளிகளை காண அனுமதி மறுப்பு – சுகாதாரத்துறை திட்டவட்டம்!!

0
கொரோனா பாதித்த நோயாளிகளை காண அனுமதி மறுப்பு - சுகாதாரத்துறை திட்டவட்டம்!!
கொரோனா பாதித்த நோயாளிகளை காண அனுமதி மறுப்பு - சுகாதாரத்துறை திட்டவட்டம்!!
கொரோனா பாதித்த நோயாளிகளை காண அனுமதி மறுப்பு – சுகாதாரத்துறை திட்டவட்டம்!!

கொரோனா பரவல் அதிகம் இருப்பதால் தமிழகத்தில் கொரோனா நோயாளிகளை காண அவர்களது உறவினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

சுகாதாரத்துறை அறிவிப்பு:

தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கின்றது. அதே போல் பலி எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி வருகிற மே 24 முதல் 7 நாட்களுக்கு எவ்வித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வருமான வரி தாக்கல் செய்ய ஜூன் 7ல் புதிய இணையதளம் – சிறப்பம்சங்கள் என்னென்ன?

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களை அவர்களது உறவினர்கள் பார்ப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசும் போது தெரிவித்துள்ளார்.

 

TN Job “FB  Group” Join Now

சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அவர் நிருபர்களிடம் பேசும் போது, “தமிழகத்தில் உள்ள 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்த என்று 11 லட்சம் தடுப்பூசிகள் வாங்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசிகள் அனைத்து மாவட்டங்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை பார்க்க வரும் உறவினர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல் கொரோனா பாதித்த நோயாளிகளை கவனித்துக் கொள்ள கூடுதல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நியமிக்கப்படுவார்கள்” இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!