உயர்கல்வி பெற கிரீமிலேயர் வருமான வரம்பு உயர்வு? வலுக்கும் கோரிக்கை!
உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான கிரீமிலேயர் வருமான வரம்பு 5 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருக்கும் நிலையில் தற்போது உடனடியாக உயர்த்த வேண்டும் என ராமதாஸ் அறிவித்துள்ளார்.
கிரீமிலேயர் வருமான வரம்பு
மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடைபெற இருக்கும் நிலையில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு இட ஒதுக்கீட்டை பெறுவதற்கான கிரீமிலேயர் வருமான வரம்பு தற்போது வரைக்கும் உயர்த்தப்படவில்லை. இதனால், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் உயர்கல்வி வாய்ப்புகளை வழங்குவதற்கான கிரீமிலேயர் வரம்பை உடனடியாக உயர்த்த வேண்டும் என ராமதாஸ் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், கிரீமிலேயர் வருமான வரம்பை தற்போது உயர்த்துவதற்கு எந்த தடையும் கிடையாது. இதனால், உடனடியாக உயர்த்த வேண்டும் என கூறியுள்ளார்.
அதாவது, இளங்கலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு முடிவுகள் வரும் செப்டம்பர் 7 ஆம் தேதியும், ஐ.ஐ.டி மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு முடிவுகள் வரும் செப்டம்பர் 11 ஆம் தேதியும் வெளியாக இருக்கிறது. மேலும், மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கான க்யூட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகுதி தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பே கிரீமிலேயர் வரம்பு உயர்த்தப்பட்டால் தான் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரால் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் சேர முடியாத சூழல் ஏற்பட்டுவிடும்.
திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ. 45 லட்சம் அபராதம் – நீதிமன்றம் அதிரடி!
அதாவது, கடந்த 2017 ஆம் ஆண்டில் இருந்தே ஒதுக்கீட்டை பெறுவதற்கான கிரீமிலேயர் வருமான வரம்பு உயர்த்தப்படவில்லை. கடந்த 2004 ஆம் ஆண்டில் கிரீமிலேயர் வருமான வரம்பு 2.5 லட்சமாகவும், 2008 ஆம் ஆண்டில் ரூ.4.5 லட்சமாகவும், 2013 ஆம் ஆண்டில் ரூ. 6 லட்சமாகவும், 2017 ஆம் ஆண்டில் ரூ. 8 லட்சமாகவும் உயர்த்தப்பட்டது. இதற்கு பிறகு 5 ஆண்டுகள் ஆகியும் கிரீமிலேயர் வருமான வரம்பு உயர்த்தப்படவில்லை. இதனால், அடுத்த ஆண்டிற்கான தவணையையும் சேர்த்து கிரீமிலேயர் வரம்பை ரூ.15 லட்சமாக உயர்த்த வேண்டும் என ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்