மருத்துவர் பரிந்துரையின்றி மருந்து விற்பனை – கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை!

0
மருத்துவர் பரிந்துரையின்றி மருந்து விற்பனை - கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை!

மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் மருந்து மாத்திரைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மருந்து விற்பனை:

இந்தியாவில் மருந்து கடைகளில் மருத்துவரின் எவ்வித பரிந்துரையும் இன்றி பொதுமக்கள் அதிகளவில் மருந்து மாத்திரைகளை வாங்கி உட்கொள்கின்றனர். இது சில நேரங்களில் தீமையாக முடிந்து விடுகிறது. குறிப்பாக வலி நிவாரணி மாத்திரைகளை அதிகளவு விற்பனையாகிறது. மருந்து கடைக்காரர்கள் மக்களின் உடல் உபாதைகளை மட்டும் கேட்டறிந்து அதற்கேற்றவாறு மருந்து மற்றும் மாத்திரைகளை வழங்குகின்றனர். மேலும் ஆன்லைன் வாயிலாகவும் மருந்து விற்பனை அதிகரிக்கிறது.

இதனை அதிக அளவில் உட்கொள்ளும் போது வேறுவித பிரச்சினைக்கு வித்திடுகிறது. இந்த நிலையில் இந்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதாவது மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் வலி நிவாரணி மருந்துகளை விற்பனை செய்தால் அந்த கடையின் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!