டெல்லி அரசானது உலர் நாட்களை முன்னிட்டு இரண்டு நாட்களுக்கு மதுபான கடைகள் மூடப்பட்ட உள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் மது பிரியர்கள் வருத்தத்தில் உள்ளார்கள்.
மதுபான கடைகள் மூடல்:
தமிழகத்தில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் முக்கிய தலைவர்களின் பிறந்த நாள் போதும், பண்டிகை நாட்களிலும், முக்கிய தினங்களிலும் மதுபான விலக்கு வழங்கப்படுவது வழக்கமான ஒன்றாகும். இவ்வாறு மதுபான விலக்கு அறிவிக்கப்படும் நாட்கள் உலர் நாட்கள் என்றழைக்கப்படும். இத்தகைய நாட்களில் மதுபான கடைகள் அனைத்தும் மூடப்படுவதுடன் விடுதிகள் மற்றும் உணவகங்களில் மதுபான சேவை தடை செய்யப்படும்.
RITES நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – டிகிரி / டிப்ளமோ முடித்தவர்கள் விரைந்து விண்ணப்பியுங்கள்!
இந்த உலர் நாட்களுக்கான பட்டியலானது 03 மாதங்களுக்கு ஒரு முறை டெல்லி அரசாங்கத்தால் வெளியிடப்படும். இந்த வகையில் ஜனவரி – மார்ச் மாதங்களுக்கென வெளியிடப்பட்ட பட்டியலில் வருகின்ற மார்ச் 25ம் தேதி ஹோலி பண்டிகை என்பதாலும், மார்ச் 29ம் தேதி புனித வெள்ளி என்பதாலும் உலர் நாடகளாக அனுசரிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இவ்விரு தினங்களிலும் டெல்லியில் மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட உள்ளதாக அரசானது தெரிவித்துள்ளது. இது மது பிரியர்களை துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.