ரேஷன் பொருட்கள் டோர் டெலிவரி – மத்திய அரசு போட்ட முட்டுக்கட்டை!!
டெல்லியில் ரேஷன் பொருட்கள் அனைத்தும் வீட்டிற்கே வந்து டோர் டெலிவரி செய்யப்படும் என்று கூறிய நிலையில் மத்திய அரசு அதற்கு தடை விதித்து முட்டுக்கட்டை போட்டுள்ளதாக டெல்லி அரசு கூறியுள்ளது.
முட்டுக்கட்டை போடும் மத்திய அரசு
கொரோனா பரவல் அதிகரித்து வரும் இந்த சூழலில் டெல்லி அரசு மக்களுக்கு பல திட்டங்களை கொண்டு வந்தது. இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் எந்த சிரமமும் படக்கூடாது என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பல திட்டங்களை அமல்படுத்தினார். அதில் ஒன்று தான் ரேஷன் பொருட்கள் டோர் டெலிவரி. பொதுமக்கள் வீட்டிற்கே நேரடியாக சென்று ரேஷன் பொருட்கள் அனைத்தும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
ரேஷன் அட்டைகளில் புதிய குடும்ப உறுப்பினர் சேர்ப்பு – ஆன்லைனில் செய்வது எப்படி?
தற்போது அடுத்த வாரம் முதல் இந்த திட்டம் அமலுக்கு வர உள்ள நிலையில், மத்திய அரசு முட்டுக்கட்டை போட்டுள்ளது. இதனால் டெல்லி மக்கள் பலரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். அதாவது இதுகுறித்து டெல்லி அரசு கூறுகையில் அடுத்த சில தினங்களில் ரேஷன் பொருட்கள் அனைத்தும் பொதுமக்கள் வீட்டிற்கு செல்ல இருந்தது.
TN Job “FB Group” Join Now
இதனால் 72 லட்சம் ஏழை மக்கள் பயனடைவர். மத்திய அரசு அறிவித்தபடி பிரதம மந்திரி கர் கர் ரேஷன் யோஜனா என்ற பெயர் நீக்கப்பட்டது. அதற்கு பதிலாக தான் பாதுகாப்பு சட்டம் 2013 ன் கீழ் ரேஷன் பொருட்களை வீட்டிலேயே விநியோகம் செய்ய தீர்மானிக்கப்பட்டது. இதிலேயே அனைத்து பிரச்சனைகள் தீர்ந்தது என்றே சொல்லலாம்.
தமிழக ஹோட்டல்களில் பார்சல் உணவுகளுக்கு சேவை வரி ரத்து – நீதிமன்றம் உத்தரவு!!
ஆனால் தற்போது என்னவென்றால் இந்த ரேஷன் பொருட்கள் வீட்டிலேயே விநோயோகம் செய்யும் திட்டங்களை அமல்படுத்தும் கோப்புகளை துணைநிலை ஆளுநர் நிராகரித்து விட்டார். மேலும் இந்த திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை எனவும், நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிவையில் தான் உள்ளது என்று காரணம் காட்டப்படுகிறது. மேலும் டெல்லி அரசு சட்டப்படி இந்த திட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதல் தேவையில்லை என்றும் கூறியுள்ளது.