தமிழக ஹோட்டல்களில் பார்சல் உணவுகளுக்கு சேவை வரி ரத்து – நீதிமன்றம் உத்தரவு!!

0
தமிழக ஹோட்டல்களில் பார்சல் உணவுகளுக்கு சேவை வரி ரத்து - நீதிமன்றம் உத்தரவு!!
தமிழக ஹோட்டல்களில் பார்சல் உணவுகளுக்கு சேவை வரி ரத்து - நீதிமன்றம் உத்தரவு!!
தமிழக ஹோட்டல்களில் பார்சல் உணவுகளுக்கு சேவை வரி ரத்து – நீதிமன்றம் உத்தரவு!!

தமிழகத்தில் உள்ள முக்கிய உணவகங்களில் இருந்து எடுத்து செல்லப்படும் பார்சல் உணவுக்கும் சேவை வரி பொருந்துமா என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து இதுகுறித்து புதிய விளக்கத்தை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீதிமன்றம் விளக்கம்:

தமிழகத்தில் முக்கிய உணவகங்களான சென்னை அஞ்சப்பர் செட்டிநாடு, தலப்பாகட்டி, ஆர்எஸ்எம், பிரசன்னம் மற்றும் சங்கீதா உணவு நிறுவனங்கள் தங்களது உணவகங்களில் இருந்து எடுத்து செல்லப்படும் பார்சல் உணவுக்கும் சேவை வரி பொருந்துமா என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

ரேஷன் அட்டைகளில் புதிய குடும்ப உறுப்பினர் சேர்ப்பு – ஆன்லைனில் செய்வது எப்படி?

அதில், உணவகங்களிலிருந்து இருந்து எடுத்து செல்லப்படும் பார்சல் உணவுக்கு சேவை வரி செலுத்தப்பட தேவையில்லை. அது சேவைவரி வரம்பிற்கு உட்படாது எனவும், பார்சல் உணவு என்பது வணிகம் மட்டுமே. மேலும் உணவகங்களில் அமர்ந்து ஏசி வசதியுடன் உணவருந்தினால் மட்டுமே சேவை வரி பொருந்தும். ஆனால் உணவகங்களில் பார்சலாக எடுத்துச் செல்லப்படும் உணவுகளுக்கு சேவை வரி வசூலிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கூறுகையில், உணவகங்களில் இருந்து எடுத்து செல்லப்படும் பார்சல் உணவுகளுக்கு சட்ட ரீதியாக சேவை வரி விதிக்க கூடாது. அதனை மீறி விதித்தால் அது சட்ட விரோதமான செயலாகும். எனவே, இது தொடர்பாக உணவகங்களுக்கு சரக்கு சேவை வரித் துறை சார்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவுகள் ரத்து செய்யப்படுகின்றன என உத்தரவிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!