பழைய கலால் வரி மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு – அமைச்சரவை ஒப்புதல்!
டெல்லியில் 2021-22ம் ஆண்டு கலால் கொள்கை முற்றிலும் மாற்றப்பட்டது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றது தெரிய வந்தது. இந்த நிலையில் பழைய கலால் கொள்கை மேலும் 6 மாதங்களுக்கு அமல்படுத்தப்படுவதாக டெல்லி அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கலால் வரி
டெல்லியில் 2021-22ம் ஆண்டு கலால் கொள்கையின் படி, மது விற்கும் முறை முற்றிலும் மாற்றப்பட்டது. இந்த கலால் கொள்கையின் படி, மது விற்பனை முற்றிலும் தனியார் வசம் சென்றது. மேலும் டெல்லி 32 மண்டலங்களாக பிரிக்கப்பட்டதுடன், மது விற்பனை செய்வதற்கான உரிமம் பெறுவதற்கு தனியார் நிறுவனங்கள் ஏலம் மூலமாக அழைக்கப்பட்டனர். அதன்படி தற்போது 849 சில்லறை விற்பனையாளர்களுக்கு மது விற்பனை செய்வதற்கான உரிமம் வழங்கப்பட்டது.
ஆனால் இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றது ஆய்வில் கண்டறியப்பட்டது. அத்துடன் முன்னாள் துணை முதல்வர் உட்பட கலால் துறை அமைச்சரும் இந்த ஊழலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இவர்களை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அதனால் இந்த கலால் கொள்கையை திரும்ப பெற வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.
ஐய்யா….தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு ஒரே மழை தான் – வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை!
மேலும் தற்போது அமலில் இருக்கும் கலால் கொள்கை மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், பழைய கலால் வரி கொள்கை ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் புதிய கலால் கொள்கையை தயாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மதுபானக் கொள்கை மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது.