தீபாவளிக்கு பட்டாசு கடை வைக்க திட்டமிடுபவரா நீங்கள்? இதோ அரிய வாய்ப்பு!
சிவகங்கை மாவட்டத்தில் தீபாவளியை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடை அமைக்க விரும்பும் வியாபாரிகள் செப்டம்பர் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
தற்காலிக பட்டாசு கடை:
தமிழகத்தில் வருடம் தோறும் தீபாவளி பண்டிகை அனைவராலும் சிறப்பாக கொண்டாடப்படும். புத்தாடை அணிந்தும், இனிப்பு வகைகளை பரிமாறியும் இந்த தீப ஒளி திருநாளை அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடுவர். தீபாவளியின் முக்கிய சிறப்பம்சமாக இருப்பது பட்டாசு தான். சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடுவது மிகவும் பிடிக்கும். இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் ஏராளமான வியாபாரிகள் பட்டாசு விற்பனைக்காக தற்காலிக பட்டாசு கடைகளை அமைப்பர்.
தமிழகத்தில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா – பள்ளிகள் மூடல்!
இந்த நிலையில் நடப்பு ஆண்டு தீபாவளி பண்டிகை நெருங்கி வருகிறது. வரும் நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகையை கொண்டாட உள்ளோம். அதனால் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பத்தை பெற்று அதை முழுமையாக பூர்த்தி செய்து அதனுடன் புல நீல வரைபடம், பத்திர ஆவணங்கள், பான் அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் செலுத்திய வரி ரசீது ஆகியவற்றை இணைக்க வேண்டும்.
தமிழகத்தில் புதிதாக 41,695 பேருக்கு வேலைவாய்ப்பு – 24 தொழில் முதலீடுகளுக்கு ஒப்பந்தம்!
அதை அந்தந்த பகுதியில் உள்ள இ-சேவை மையம் வாயிலாக செப்டம்பர் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதன் பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் தேர்தெடுக்கப்படும் விண்ணப்பங்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு 15 நாட்களுக்கு முன்பாக விற்பனைக்கான உரிமம் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.