தமிழகத்தில் புதிதாக 41,695 பேருக்கு வேலைவாய்ப்பு – 24 தொழில் முதலீடுகளுக்கு ஒப்பந்தம்!

0
தமிழகத்தில் புதிதாக 41,695 பேருக்கு வேலைவாய்ப்பு - 24 தொழில் முதலீடுகளுக்கு ஒப்பந்தம்!
தமிழகத்தில் புதிதாக 41,695 பேருக்கு வேலைவாய்ப்பு - 24 தொழில் முதலீடுகளுக்கு ஒப்பந்தம்!
தமிழகத்தில் புதிதாக 41,695 பேருக்கு வேலைவாய்ப்பு – 24 தொழில் முதலீடுகளுக்கு ஒப்பந்தம்!

தமிழகத்தில் ‘ஏற்றுமதியில் ஏற்றம் – முன்னணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் நடத்தப்பட்ட மாபெரும் வேலைவாய்ப்பு மாநாட்டில் சுமார் 24 தொழில் முதலீடுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 41,695 பேருக்கு வேலை வாய்ப்புகள் அளிக்கப்பட இருக்கிறது.

வேலை வாய்ப்புகள்

இந்தியாவின் 75 ஆவது ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு, மத்திய மற்றும் மாநில அரசுடன் பல்வேறு ஏற்றுமதி குழுமங்கள் ஒன்றாக இணைந்து ‘வர்த்தகம் மற்றும் வணிக வாரம்’ என்ற நிகழ்வினை நடத்தி வருகிறது. இந்த நிகழ்வின் நோக்கம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது ஆகும். அந்த வகையில் தமிழகத்தில் இன்று (செப்டம்பர் 22) காலை 10.45 மணியளவில், சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ‘ஏற்றுமதியில் ஏற்றம் – முன்னணியில் தமிழ்நாடு’ என்ற வேலைவாய்ப்பு மாநாட்டை முதல்வர் முக ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை அறிக்கை!

இதை தொடர்ந்து மாநாட்டில் உரையாற்றிய முதல்வர், ‘தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கை’ மற்றும் ‘குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான ஏற்றுமதி கையேடு’ ஆகியவற்றை வெளியிட்டார். மேலும், தமிழகத்தில் புதிதாக தொழில் துவங்க பல ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. அந்த வகையில் சுமார் ரூ.2,210 கோடி மதிப்பிலான 24 தொழில் முதலீடுகளுக்கு ஒப்பந்தமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 41,695 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்க உள்ளது.

Myntra நிறுவனத்தில் 11,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் – பருவகால தகவல்!

அந்த வகையில் உலக அளவில் வர்த்தகம் மற்றும் வணிகத்தில் தமிழகத்தை முன்னணி மாநிலமாக மாற்றுவதை நோக்கமாக கொண்டு நடத்தப்பட்ட இம்மாநாட்டில், 21 புதிய ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனங்களுடன் அரசு நிறுவனங்களின் கண்காட்சியும் துவங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் முதல்வருடன் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக தொழில்துறை அமைச்சர் அன்பரசன், தலைமைச் செயலர் இறையன்பு, தொழில் துறை முதன்மைச் செயலாளர் நா.முருகானந்தம் மற்றும் மத்திய அரசின் வர்த்தகத்துறை கூடுதல் செயலாளர் சஞ்சய் சத்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!