தமிழகத்தில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா – பள்ளிகள் மூடல்!
தமிழகத்தில் வந்தவாசி அருகே மூன்று மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 2 பள்ளிகளுக்கும் 3 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டு மூடப்பட்டு உள்ளது.
மாணவர்களுக்கு கொரோனா:
கொரோனா தொற்று தீவிரமாக பரவி வந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலை என உருமாறி பரவி வந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. அதனை தொடர்ந்து ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டது. கொரோனா தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் செப்.,1ம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.
தமிழகத்தில் புதிதாக 41,695 பேருக்கு வேலைவாய்ப்பு – 24 தொழில் முதலீடுகளுக்கு ஒப்பந்தம்!
இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. தற்போது வந்தவாசி அருகே, மூன்று மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தேசூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் 35 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
Myntra நிறுவனத்தில் 11,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் – பருவகால தகவல்!
இந்த பரிசோதனையின் முடிவில் 1 மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து வந்தவாசி அடுத்த குணகம்பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படிக்கும், இரண்டு மாணவியருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் படிக்கும் இரண்டு பள்ளிகளுக்கும் மூன்று நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் பள்ளி வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளித்து, மாணவர்களுடன் தொடர்புடையவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.