Myntra நிறுவனத்தில் 11,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் – பருவகால தகவல்!
பெங்களூரு நகரத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பிளிப்கார்ட் நிறுவனத்துக்கு சொந்தமான மிந்த்ரா பேஷன் இ-காமர்ஸ் தளம் சுமார் 11,000 பேரை பருவகால வேலைவாய்ப்புகளின் கீழ் பணியமர்த்தியுள்ளது.
வேலை வாய்ப்புகள்
தற்போதுள்ள நவ நாகரிக உலகில் ஒரு கையடக்க மொபைல் போன்கள் மூலமாகவே அனைத்து வகையான அத்தியாவசிய தேவைகளையும் இருந்த இடத்தில் இருந்தபடியே நிறைவேற்றிக்கொள்ளும் அளவிற்கு டிஜிட்டல் சேவைகள் விரிவடைந்துள்ளது. அந்த வகையில் மக்கள் எதிர்பார்க்கும் சேவைகளை குறிப்பிட்ட நேரத்திற்குள் நிறைவேற்றி தரும் இ-காமர்ஸ் தளங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படி மக்களின் ஆதரவை பெற்று இயங்கி வரும் முன்னணி இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்ட் நிறுவனம், பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
ஆன்லைனில் ஆர்டர் செய்வோர் கவனத்திற்கு – காவல்துறை எச்சரிக்கை!
இந்த ப்ளிப்கார்ட் நிறுவனம் இந்தியா முழுவதும் பல லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. இது தவிர ப்ளிப்கார்ட் நிறுவனம், மிந்த்ரா என்ற பெயரில் சொந்தமான பேஷன் இ-காமர்ஸ் தளத்தையும் செயல்படுத்தி வருகிறது. இந்த மிந்த்ரா பேஷன் இ-காமர்ஸ் தளம் தற்போது, விநியோகச் சங்கிலி, டெலிவரி மற்றும் வாடிக்கையாளர் ஆதரவு உட்பட்ட பணியிடங்களுக்கு சுமார் 11,000 பேரை வேலைக்கு அமர்த்தியுள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டில் 57%மாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் செப்.23ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இது தொடர்பாக மிந்த்ரா தலைமை நிர்வாக அதிகாரி அமர் நாகாரம் கூறுகையில், ‘அனைத்து பண்டிகை காலத்திலும் வாடிக்கையாளர்களின் தேவைகளையும் நிறைவேற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் பணியமர்த்தலில் இது மிகப்பெரிய வேலைவாய்ப்பு இயக்கமாகும். ஏனெனில் வாடிக்கையாளர்களிடம் இருந்து அவர்களின் பண்டிகை கால தேவைகளுக்காக வலுவான கோரிக்கைகளை நாங்கள் எதிர்பார்க்கிறோம்’ என குறிப்பிட்டுள்ளார். இது தவிர இந்த ஆண்டு பண்டிகை காலத்தில், மிந்த்ரா நிறுவன ஊழியர்களுக்கு வழக்கமான ஊதியத்துடன் வருகை போனஸ் உட்பட கூடுதல் சலுகைகளை அளிக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.