பழனியில் நாளை (டிச.18) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிக்காக பல்வேறு பகுதியில் மின்தடை அறிவிக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் காரணமாக பழனியில் உள்ள பாலசமுத்திரம், நெய்க்காரப்பட்டி ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை அன்று (டிச.18) மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடை அறிவிப்பு
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் மின் கசிவு மற்றும் மின் கோளாறு காரணமாக பல்வேறு விபத்துக்கள் ஏற்படுகின்றன. மேலும் மின் இணைப்பு கம்பிகளில் ஏற்படும் பிளவு காரணமாக விபத்துகள் ஏற்படுகிறது. ஆதலால் தமிழக அரசு இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் குறிப்பாக தமிழக அரசு மின் பராமரிப்பு பணிகளை முறையாக மாதந்தோறும் மேற்கொள்கிறது. இதனால் மின் விபத்துகள் ஏற்படுவது குறைகிறது. அதனால் மின் வாரியம் மாதந்தோறும் மின்தடையை அறிவித்து மின் பராமரிப்பு பணிகளை முறையாக சரி செய்து வருகிறது.
SBI கிரெடிட் கார்டு வாங்கினால் ஸ்மார்ட் வாட்ச் இலவசம் – அதிரடி அறிவிப்பு!
இதனை முறையாக தேதி, நேரம் குறிப்பிட்டு அறிவித்து பின் மின்தடையை செயல்படுத்துகிறது. அந்நேரத்தில் மின் பராமரிப்பு பணிகள் முறையாக சரி செய்யப்படுகின்றன. இதனால் மின் விபத்துகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனை தொடர்ந்து நாளை பழனி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து நாளை (டிச.18) அன்று பழனி துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோர்க்கு எச்சரிக்கை – பொது சுகாதாரத்துறை இயக்குநர் தகவல்!
மேலும் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. மேலும் மின் பராமரிப்பு பணிகளை தீவிரமாக முடிக்க வேண்டும். அதனை தொடர்ந்து பழனி நகா், பாலசமுத்திரம், நெய்க்காரப்பட்டி, ஆயக்குடி மற்றும் சின்னக்கலையம்புத்தூா் ஆகிய பகுதிகளில் நாளை (டிச.18) மின்தடை ஏற்படும் என பழனி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கலைவேந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார். அத்துடன் மின் பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் மின் விநியோகிக்கப்படும்.