தமிழகத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோர்க்கு எச்சரிக்கை – பொது சுகாதாரத்துறை இயக்குநர் தகவல்!

0
தமிழகத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோர்க்கு எச்சரிக்கை - பொது சுகாதாரத்துறை இயக்குநர் தகவல்!
தமிழகத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோர்க்கு எச்சரிக்கை - பொது சுகாதாரத்துறை இயக்குநர் தகவல்!
தமிழகத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோர்க்கு எச்சரிக்கை – பொது சுகாதாரத்துறை இயக்குநர் தகவல்!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்ததை அடுத்து தற்போது ஓமைக்காரன் பரவல் தீவிரமாக பரவி வருகிறது. தற்போது தமிழகத்தில் ஓமைக்காரன் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தமிழக்தில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஓமைக்காரன் பரவல்

தமிழகத்தில் தற்போது கொரோனா நோய் பரவல் குறைந்துள்ளது. ஓமைக்ரான் வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. தற்போது இந்தியா உட்பட 70 நாடுகளில் ஓமைக்காரன் வைரஸ் பரவி உள்ளது. இந்தியாவில் குஜராத், கர்நாடகா, டெல்லி, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் ஓமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 4 பேருக்கு ஓமைக்ரான் தொற்று இருக்கலாம் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் தமிழக அரசு கொரோனா தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தில் ஏற்படுத்தி வருகின்றன.

தமிழகத்தில் டிச.19 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – 100+ நிறுவனங்கள் பங்கேற்பு!

அதன்படி 82.08 சதவீதம் பேர் முதல் தவணையும், 51.87 சதவீதம் பேர் இரண்டு தவணையும் செலுத்தி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இதில் 60 வயதுக்கு மேற்பட்டோர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. அதாவது ஒரு டோஸ் செலுத்தியவர்கள் 57 சதவீதமாகவும், இரண்டு டோஸ் செலுத்தியவர்கள் 39 சதவீதமாகவும் இருக்கின்றன. இதனால் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஓமைக்ரான் பாதிப்பு சுலபமாக ஏற்படக்கூடும். மேலும் கொரோனா பரவல் 100 சதவீதம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டால் அதில் 10 சதவீதம் பேருக்கு மட்டும் தொற்று ஏற்படும்.

ஜனவரி 14 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு, 3 வாரங்கள் பள்ளிகள் மூடல் – ஓமைக்ரான் எதிரொலி! பிரதமர் உத்தரவு!

ஆனால் ஓமைக்ரான் தொற்று பரவல் 100 பேருக்கு பதிலாக 10 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டால் அந்த 10 சதவீதத்தில் 1000 பேருக்கு பாதிப்பு ஏற்படும். அதனால் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் மொத்தம் தடுப்பூசி போடாதவர்கள், இரண்டாவது டோஸ்க்கு காத்திருப்பவர்கள் 94 லட்சம் பேர் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் ஆகியோர் கட்டாயமான முறையில் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். அத்துடன் முகக்கவசம் அணிய வேண்டும் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் செல்வ விநாயகம் அவர்கள் கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!