தமிழகத்தில் வருகிற டிச.11 ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் – 2000+ பணியிடங்கள்!
தமிழகத்தில் வேலையில்லா பட்டதாரிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு இடங்களில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. அதன் காரணமாக திருவண்ணாமலையில் வருகிற டிச.11 ஆம் தேதி தனியார் துறை நிறுவனங்கள் இணைந்து நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறயுள்ளது.
வேலைவாய்ப்பு முகாம்:
கொரோனா தொற்று காரணமாக பல்வேறு பாதிப்புகளை பொதுமக்கள் எதிர்கொள்கின்றனர். அதில் குறிப்பாக இளைஞர்கள் வேலைவாய்ப்பை இழந்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் குறிப்பாக ஏராளமான இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்களை ஏற்படுத்தி வருகின்றன. இதனை தொடர்ந்து பல்வேறு தனியார் நிறுவனங்கள் இணைந்து நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் திருவண்ணாமலையில் வருகிற டிசம்பர் 11 ஆம் தேதி நடைபெற உள்ளது.
TNPSC தேர்வு முறை 2022 குறித்த முழு விபரம் – முக்கிய அறிவிப்புகள் இதோ!
இந்த வேலைவாய்ப்பு முகாம் மூலம் 2000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தருவதாக தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தெரிவித்துள்ளார். இந்த முகாம் மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மகளிர் திட்டம் ஆகியவற்றின் சார்பில் நடை பெற உள்ளது. அத்துடன் இந்த முகாம் திருவண்ணாமலையை அடுத்த தென் மாத்தூர் கிராமத்தில் உள்ள அருணை பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில் காய்கறிகள் விற்பனை – அரசுக்கு கோரிக்கை!
திருவண்ணாமலை மாவட்டத்தில் படிக்கும் மற்றும் படித்துள்ள இளைஞர்களுக்கு இந்த வேலைவாய்ப்பு முகாம் ஒரு சிறந்த வாய்ப்பு ஆகும். இந்த வேலைவாய்ப்பு முகாமில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் நேர்காணல் நடத்தப்பட்டு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்பை உருவாக்கி தருவதாக அமைச்சர் சி.வெ.கணேசன் கூறியுள்ளார். படித்த தகுதிவாய்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தருவது தான் தமிழக அரசின் நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.