தமிழக ரேஷன் கடைகளில் காய்கறிகள் விற்பனை – அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் வாயிலாக குறைந்த விலையில் காய்கறிகள் விற்க வேண்டும் என்று அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
காய்கறி விலை:
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றாழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 1ம் தேதி முதல் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த கனமழை காரணமாக காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்தது. அனைத்து காய்கறிகளின் விலையும் கிலோ 100 ரூபாயை எட்டியது. மழை வெள்ளத்தால் மக்கள் வேலைகளுக்கும் போக முடியாமல் தவித்து வரும் நிலையில் அத்தியாவசிய தேவையான காய்கறிகள் விலை உயர்வால் மக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
குறைந்த வட்டியில் நகைக்கடன் வாங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – வங்கிகளின் முழு விபரங்கள் இதோ!
குறிப்பாக தக்காளி கிலோ ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் தொடர்ந்து அதன் விலை அதிகரித்தது. தமிழகத்தை தொடர்ந்து ஆந்திராவிலும் கனமழை பெய்ததால் தக்காளி வரத்து இல்லை. இந்த நிலையில் ரேஷன் கடைகள் மூலம் பாதி விலையில் காய்கறிகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் டிச.14ம் தேதி (செவ்வாய்) உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் காய்கறிகளின் விலையும் 100 ரூபாய்க்கு மேல் வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இது பொது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒரு சில காய்கறிகளைத் தவிர மற்ற அனைத்து காய்கறிகளின் விலையும் 100 ரூபாய்க்கு மேல் வெளிசந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. முதல்வர் உடனே தலையிட்டு, அனைத்து காய்கறிகளின் விலையையும் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.