தமிழகத்தில் டிச.14ம் தேதி (செவ்வாய்) உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் திருக்கோயிலின் சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு வரும் 14ம் தேதியன்று திருச்சி மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
விடுமுறை அறிவிப்பு
தமிழகம் முழுவதும் தற்போது தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த சூழலில் போக்குவரத்து, பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள், மத வழிபாட்டு தலங்கள் என அனைத்து செயல்பாடுகளுக்கும் அரசு அனுமதி அளித்துள்ளது. அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதலே தமிழகத்தில் உள்ள திருக்கோவில்கள் அனைத்தும் முறையான கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களுடன் மீண்டுமாக திறக்கப்பட்டு தரிசனங்கள் மற்றும் பூஜைகள் என அனைத்தும் நடைபெற்று வருகிறது.
பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடல்? 149 மாணவர்களுக்கு கொரோனா உறுதி! அவசர ஆலோசனை!
இந்நிலையில் திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் திருக்கோவிலில் டிசம்பர் 3 ஆம் தேதியன்று வைகுண்ட ஏகாதசி விழா துவங்கி இருக்கிறது. தொடர்ந்து 11 நாட்களுக்கு நடைபெறும் இந்த சிறப்பு வழிபாடு சொர்க்கவாசல் திறப்பு எனப்படும் பரமபதவாசல் திறப்புடன் முடிவடைவது வழக்கம். அதாவது 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையான பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கத்தில், ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் 20 நாட்கள் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுவது வழக்கம்.
நாடு முழுவதும் பிப்ரவரி மாதம் ஊரடங்கு அமல் – ஒமைக்ரானால் 3வது அலை! பேராசிரியர் கணிப்பு!
அந்த வகையில் இந்த ஆண்டு கார்த்திகை மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, டிசம்பர் 14ம் தேதியன்று அதிகாலை 4.45 மணியளவில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் திருக்கோயிலின் சொர்க்கவாசல் திறக்கப்பட இருக்கிறது. இந்த நிகழ்வை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு மட்டும் வரும் 14ம் தேதியன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்வதற்காக டிச.18ம் தேதியை பணி நாளாக அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.