டிச.10 தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – கனமழை எதிரொலி!
தமிழகத்தில் தற்போது மாண்டஸ் புயல் காரணமாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கனமழை எதிரொலி:
வங்க கடல் பகுதியில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு நிலையானது இன்று வலுப்பெற்று கரையை கடக்க உள்ளது. கடந்த 2 நாட்களாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் கனத்த மழை பெய்து வருகிறது. மேலும் 3 நாட்களுக்கு சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று பெய்த கனமழை காரணமாக ஒரு சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
Follow our Instagram for more Latest Updates
இனி அனைவருக்கும் ரேஷன் பொருட்கள் கிடையாது – வந்துள்ள அதிரடி மாற்றம்!
இன்று புயல் வலுப்பெறுவதால் தமிழகம் முழுவதும் கனமழை அலர்ட் விடுக்கப்பட்டது. இதனால் மொத்தம் 27 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புயல் இன்று கரையை கடக்க உள்ள போதிலும், நாளையும் இதன் தாக்கம் இருக்கும் என்பதால் கனமழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், டிசம்பர் 10ம் தேதியான நாளை சென்னை, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை,கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.