இனி அனைவருக்கும் ரேஷன் பொருட்கள் கிடையாது – வந்துள்ள அதிரடி மாற்றம்!
இந்தியாவில் ரேஷன் கார்டு தொடர்பான விதிகளை மாற்ற உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. அதனால் இனி அனைவரும் ரேஷன் கார்டு மூலம் பயனடைய முடியாது. தகுதியுடையவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
ரேஷன் கார்டு:
நாடு முழுவதும் மக்கள் ரேஷன் கடைகள் மூலம் குறைந்த விலையில் பொருட்களை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மத்திய அரசு ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை கொண்டு வந்தது. இதன் மூலம் ஒரு ரேஷன் அட்டைதாரர் இந்தியாவின் எந்த மாநிலத்தில் இருந்து வேண்டுமானாலும் கார்டை காண்பித்து பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
இந்த திட்டம் வெளி மாநிலங்களில் தங்கி பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தகுதி அல்லாதவர்கள் ரேஷன் கடைகள் மூலம் பொருட்களை பெற்று அதனை கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பதாக புகார்கள் எழுந்து வருகிறது. இது குறித்த அரசு ஆய்வு செய்து தற்போது முக்கிய முடிவை எடுத்துள்ளது.
டிச.12ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் – ஆட்சியர் விடுத்துள்ள வேண்டுகோள்!!
Follow our Instagram for more Latest Updates
அதாவது இனி வரும் நாட்களில் குடும்ப வருமானம், வசதி ஆகியவற்றை அடிப்படையாக வைத்து ரேஷன் பொருட்களை அரசு வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தமிழக அரசு மற்றும் மத்திய அரசிடம் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.