தமிழகத்தில் டிச.24ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் திடீர் உத்தரவு!
இன்னும் சில நாட்களில் வரவுள்ள கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் டிசம்பர் 24ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அளிக்க அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
உள்ளூர் விடுமுறை:
தமிழகத்தின் குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டும் நன்கு சிறப்பிக்கப்படும் பண்டிகைகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் உள்ளூர் விடுமுறை அளிக்க அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் மட்டும் கொண்டாடப்படும் திருவிழாக்கள், பண்டிகைகள் போன்ற தினங்களின் பொழுது உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு, அதற்கு ஈடாக வேறு நாளில் வேலை நாளாக அறிவிக்கப்படும்.
அரசு பள்ளிகளில் 2023-2024 கல்வி ஆண்டு முதல் CBSE பாடத்திட்டம் – அமலாகும் புதிய விதி!!
Exams Daily Mobile App Download
அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக அளவிலான கிறிஸ்தவ மதத்தை சார்ந்த மக்கள் வசிக்கின்றனர். மேலும், டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, அதற்கு முந்தைய நாளான டிசம்பர் 24ம் தேதியான சனிக்கிழமை கிறிஸ்துமஸ் ஈவ் சிறப்பிக்கப்படுகிறது. இதனால் டிச.24 சனிக்கிழமை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார். இதற்கு பதிலாக பிப்ரவரி 11ம் தேதி வேலை நாளாக ஈடு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.