ரூ.21,000/- சம்பளத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !
நன்னடத்தை அலுவலர் (Legal cum Probation Officer) பணியிடங்களை நிரப்ப புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இந்த தமிழக அரசு பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் இந்த அறிய வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தமிழக அரசு Legal cum Probation Officer வேலைவாய்ப்பு விவரங்கள்:
- புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் தற்போது சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் (Legal cum Probation Officer) பணியிடம் காலியாக உள்ளது.
- விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் இளங்கலை சட்டப் படிப்பு B.L. LLB (Regular) பயின்றவராக இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர் 1 வருடம் குழந்தைகள் நலம், சமூக நலம், தொழிலாளர் நலம் போன்ற சட்டம் சார்ந்த பணிகளில் அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியம் ஆகும்.
- இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 40 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியம் ஆகும்.
- விண்ணப்பதாரர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
- அவ்வாறு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர் ரூ.21,000/- ஊதியம் பெறுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 8.4.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட அவகாசம் முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.