IND vs SL: பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் பகலிரவு டெஸ்ட் போட்டி – BCCI திட்டம்
இலங்கை இம்மாதம் இறுதியில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் T20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் பகல் இரவு ஆட்டமாக நடத்த BCCI திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
BCCI திட்டம்:
கடந்த ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்கிய இந்தியா தென்னாபிரிக்கா அணிகள் மோதிய 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய அணி மூன்றிலும் தோல்வியடைந்து தொடரை கைப்பற்ற தவறியது. இதை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 T20 போட்டிகளில் விளையாட உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் இந்தியா இடையிலான 3 போட்டிகள் கொண்ட தொடர் அடுத்த மாதம் பிப்ரவரி 6 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இத்தொடரில் இந்திய வீரர் சிறப்பாக விளையாடி தொடரை கைப்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு ஊழியர்களுக்கு 7 நாட்கள் விடுப்பு – மாநில அரசு அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிந்தவுடன் வருகிற பிப்ரவரி 25 தேதி இலங்கை அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர் பிப்ரவரி 25-ந் தேதியும், 20 ஓவர் தொடர் மார்ச் 16-ந் தேதியும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2 டெஸ்ட் போட்டிகள் பெங்களூர், மொகாலி ஆகிய மைதானங்களிலும் ,20 ஓவர் போட்டிகள் மொகாலி, தர்மசாலா, லக்னோவில் நடைபெறும் என்றும் இந்திய கிரிக்கெட் வாரியமான BCCI தெரிவித்துள்ளது.
IPL 2022: ஏலத்தில் 8 கோடி ரூபாய் அடிப்படையில் விளையாட தயார் – சாஹல் பேட்டி!
இத்தொடரில் பெங்களூரில் நடைபெறும் 2 வது டெஸ்ட் போட்டி பகல் இரவு ஆட்டமாக நடத்த BCCI திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து BCCI இலங்கை கிரிக்கெட் வாரியத்துடன் ஆலோசனை மேற்கொண்டு விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதற்கு முன் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அகமதாபாத்தில் நடந்த பகல்- இரவு டெஸ்டில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது. இதுவரை பகல் இரவு ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்ததில்லை என்பதால் இலங்கையுடனும் டெஸ்ட் தொடரில் வெற்றி பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.