IPL 2022: ஏலத்தில் 8 கோடி ரூபாய் அடிப்படையில் விளையாட தயார் – சாஹல் பேட்டி!

0
IPL 2022: ஏலத்தில் 8 கோடி ரூபாய் அடிப்படையில் விளையாட தயார் - சாஹல் பேட்டி!
IPL 2022: ஏலத்தில் 8 கோடி ரூபாய் அடிப்படையில் விளையாட தயார் - சாஹல் பேட்டி!
IPL 2022: ஏலத்தில் 8 கோடி ரூபாய் அடிப்படையில் விளையாட தயார் – சாஹல் பேட்டி!

2022 ஆம் ஆண்டுக்கான IPL மெகா ஏலம் இம்மாதம் நடைபெறவுள்ள நிலையில் ஐபிஎல் 15 வது சீசனுக்கான மெகா ஏலத்தில் கலந்து கொள்ளும் 590 வீரர்களின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் அதிக தொகைக்கு ஏலம் போவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 8 கோடி ரூபாய் அடிப்படையில் கூட விளையாடுவேன் என்று பேட்டியளித்துள்ளார்.

சாஹல் பேட்டி:

ஐபிஎல் 15 வது சீசனில் லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் புதிதாக இணைந்துள்ளன. இந்த சீசனில் 10 அணிகள் ஆடுவதால் இந்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொண்டு மற்ற வீரர்களை விடுவித்தது. லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 அணிகளும் ஏலத்திற்கு முன்பாக தலா 3 வீரர்களை எடுத்தது. அதை தொடர்ந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விராட் கோலி 15 கோடி ரூபாய்க்கும், கிளென் மேக்ஸ்வெல் 11 கோடி ரூபாய்க்கும், முகமது சிராஜ் 7 கோடி ரூபாய்க்கும் மூன்று வீரர்களை தக்கவைத்துக் கொண்டது.

TN Job “FB  Group” Join Now

இந்த ஆண்டு IPL ஏலம் பிப்ரவரி 12-13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடக்கவுள்ளது. இந்த மெகா ஏலம் மிக சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . இந்த ஏலத்தில் கலந்து கொள்ள 1214 வீரர்கள் பெயர்களை பதிவு செய்தனர். 10 அணிகளின் விருப்பத்தின் அடிப்படையில் ஏலத்தில் இடம்பெறும் வீரர்களின் இறுதி பட்டியலை பிசிசிஐ வெளியிட்டது. அதன்படி, 590 வீரர்கள் ஏலத்தில் கலந்துகொள்கிறார்கள். இந்த 590 வீரர்களின் 228 பேர் சர்வதேச வீரர்கள். சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிராத 355 வீரர்கள் இடம்பெறுகிறார்கள். ஏல பட்டியலில் இடம்பெற்றுள்ளதில் 370 பேர் இந்திய வீரர்கள்; 220 வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

தாய் மாமா முறை செய்த “பாண்டியன் ஸ்டோர்ஸ்” குடும்பத்தினர் – வெளியான “தமிழும் சரஸ்வதியும்” ப்ரோமோ!

இறுதி பட்டியலில் இடம்பெற்றுள்ள கடந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் விடுவிக்கப்பட்ட யுஸ்வேந்திர சாஹல் சமீபத்தில் அளித்த பேட்டியில் IPL தொடரில் விளையாட எனக்கு ரூ. 15 கோடி அல்லது 17 கோடி வேண்டும் என்று சொல்ல விரும்பவில்லை, எனக்கு 8 கோடி போதும் என்று கூறினார். மேலும் மீண்டும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விளையாட விரும்புகிறேன் என்று தெரிவித்தார். எனவே இம்முறையும் சாஹல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு RTM முறையில் தக்கவைக்கப்பட்ட வாய்ப்புள்ளது. சாஹல் ஐபிஎல் வரலாற்றில் 114 போட்டிகளில் 22.28 சராசரியுடன் அதிக விக்கெட் எடுத்தவர் பட்டியலில் 9 வது இடத்தில் உள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!