அரசு ஊழியர்களுக்கு 7 நாட்கள் விடுப்பு – மாநில அரசு அறிவிப்பு!
ஒடிசாவில் கொரோனா உறுதி செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் ஒருவாரத்திற்கு விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
விடுப்பு:
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஒமிக்ரான் மற்றும் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடும் கட்டுப்பாடுகளும் அமலில் உள்ளது. தற்போதைக்கு தடுப்பூசிகள் மட்டுமே பாதிப்பில் இருந்து நம்மை காக்கும் என்பதால் பொதுமக்கள் கட்டாயம் 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகளையும் செலுத்திக்கொள்ள அனைத்து மாநில அரசுகளும் மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது. முதலில் 18 வயது மேற்பட்டோருக்கு மட்டுமே தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. தற்போது 15 வயதுக்கு மேற்பட்ட சிறார்கள் முதல் அனைத்து வயதினருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
மேலும் மத்திய அரசு, அரசு ஊழியர்கள் 50% பேர் வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி வழங்கியது. . மேலும் மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தாக்கம் அதிகமுள்ள கட்டுப்பாட்டு பகுதிகளில் இருக்கும் அலுவலர்களுக்கும் பணிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசை தொடர்ந்து மாநில அரசுகளும் இத்தகைய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியது. அதனை தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் 7 நாட்கள் வரை தற்செயல் விடுப்பு எடுத்து கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டது.
போஸ்ட் ஆபீஸில் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – புதிய மாற்றங்கள் அறிமுகம்!
அதனை தொடர்ந்து தற்போது ஒடிசா மாநிலத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் 19 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனா உறுதி செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் ஒருவாரத்திற்கு விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. மருத்துவ சான்றிதழ் சமர்ப்பித்தால் மேலும் தேவைக்கேற்ப விடுமுறை காலத்தை நீடிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.