ஆதார் பணிகளை இன்னும் முடிக்கவில்லையா? – கால அவகாசம் நீட்டிப்பு!

0
ஆதார் பணிகளை இன்னும் முடிக்கவில்லையா? - கால அவகாசம் நீட்டிப்பு!
ஆதார் பணிகளை இன்னும் முடிக்கவில்லையா? - கால அவகாசம் நீட்டிப்பு!
ஆதார் பணிகளை இன்னும் முடிக்கவில்லையா? – கால அவகாசம் நீட்டிப்பு!

ஆதார் அட்டைகளுக்கான அரசின் அறிவுறுத்தல் பணிகளை முடிக்காதவர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ் வெளியாகி உள்ளது. ஆதார் பணிகளை முடிப்பதற்கான கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.

கால அவகாசம் நீட்டிப்பு:

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆனது ஆதார் அட்டைகளை பெற்று 10 வருடங்கள் நிறைவு செய்தவர்கள் தங்களது சமீபத்திய முகவ,ரி புகைப்படம் மற்றும் மற்ற விவரங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. இதற்காக குறிப்பிட்ட காலம் வரை இலவசமாக புதுப்பிப்பு பணிகளை முடிக்க முன்னதாக அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. அதன்படி சண்டிகர் மாநிலத்தில் ஆதார் புதுப்பிப்பு பணிகளுக்கு டிசம்பர் 14ம் தேதி வரை கால அவகாசம் தற்போது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 14ஆம் தேதிக்குள் புதுப்பிப்பு பணிகளை மேற்கொள்பவர்கள் இதற்காக எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.

பொறியியல் மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் திடீர் உயர்வு – அண்ணா பல்கலை அறிவிப்பு!!

இதே போல் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆதார் அட்டையுடன் ரேஷன் கார்டுகளை இணைப்பதற்கு அரசு அறிவுறுத்தி உள்ளது. தேர்தல் பணிகள் காரணமாக ரேஷன் மற்றும் ஆதார் அட்டை இணைக்கும் செயல்முறைகள் மெதுவாக நடந்து வருகிறது. இதனால் இதற்கான கால அவகாசம் தற்போது டிசம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள 74 லட்சம் ரேஷன் கார்டு தாரர்களில் தற்போது வரை 39 லட்சம் பேர் வரை மட்டுமே ரேஷன் ஆதார் இணைப்பை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ராய்ப்பூரில் மொத்தம் 21,42,341 குடும்பங்கள் உள்ளது. இவற்றில் 4,15,201 குடும்ப அட்டைகள் ஆதாருடன் இணைக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!