இன்ஸ்டாகிராம் மூலம் இளம் பெண்களுக்கு ஆபத்து – அதிர்ச்சியளிக்கும் அதிகாரபூர்வ தகவல்!
தற்போது இளைய சமூகத்தினரிடம் அதிகம் பிரபலமாக இருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் இளம் பெண்களுக்கு ஆபத்து இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இன்ஸ்டாகிராம்:
தற்போதைய இளைய சமூகத்தினர்களில் இன்ஸ்டாகிராம் பற்றி தெரியாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு அனைத்து தரப்பு மக்களையும் இன்ஸ்டாகிராம் கவர்ந்துள்ளது. புகைப்பட விரும்பிகளை கவர்வதற்காக தொடங்கப்பட்ட இன்ஸ்டாகிராமில் உள்ள பில்டர்கள் மிகவும் பிரபலம். மிகவும் தரமான புகைப்படங்களை வழங்குவதில் இன்ஸ்டாகிராம் தான் பெஸ்ட். முன்னர் தனி நிறுவனமாக தொடங்கப்பட்ட இன்ஸ்டாகிராம் பின்னர் பேஸ்புக் நிறுவனத்தால் வாங்கப்பட்டது.
மாவட்டத்தில் 896 கட்டுப்பாட்டு பகுதிகள் – மாவட்ட நிர்வாகம் தகவல்!
அதன்பிறகு, முன்னர் இருந்ததை விட அதிக ஆதரவு கிடைத்தது. தற்போது வரை 121 கோடி பேர் இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளில் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் காரணமாக கோடிக்கணக்கான இளம் பயனாளர்களின் மன நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக பேஸ்புக் நடத்திய ஆய்வு முடிவிலேயே அறிவிக்கப்பட்டு உள்ளதாக பிரபல ஆங்கில ஊடகமான வால் ஸ்ட்ரீட் ஜோர்னல் தெரிவித்து உள்ளது. இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் மூன்றில் ஒரு இளம் பெண் தனது உடல் குறித்து கவலைப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
TN Job “FB Group” Join Now
ஆய்வில், பெண்களுக்கு பயமும், தாழ்வு மனப்பான்மையும் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், நிதி மோசடி, பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் போன்றவையும் நடந்து வருகிறது. இன்ஸ்டாகிராமில் உள்ள ரீல்ஸ் மூலம் தவிர்க்கப்படவேண்டிய விஷயங்களையும் கூட சிறுவர்கள் பார்க்க நேரிடுவதாக புகார்கள் எழுந்துள்ளது. மேலும், இதன் மூலம் தரமற்ற பொருட்களுக்கு வணிகமும் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.