தீபாவளிக்கு பின்பு மக்களுக்கு காத்திருக்கும் ஆபத்து – ஓமைக்ரான் BF.7 பரவல் அதிகரிக்க வாய்ப்பு!

0
தீபாவளிக்கு பின்பு மக்களுக்கு காத்திருக்கும் ஆபத்து - ஓமைக்ரான் BF.7 பரவல் அதிகரிக்க வாய்ப்பு!
தீபாவளிக்கு பின்பு மக்களுக்கு காத்திருக்கும் ஆபத்து - ஓமைக்ரான் BF.7 பரவல் அதிகரிக்க வாய்ப்பு!
தீபாவளிக்கு பின்பு மக்களுக்கு காத்திருக்கும் ஆபத்து – ஓமைக்ரான் BF.7 பரவல் அதிகரிக்க வாய்ப்பு!

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வந்த நிலையில் அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது குஜராத்தில் புதிதாக வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

புதிய வைரஸ்

இந்தியாவில் கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் கொரோனா வைரஸ் பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து முன்பை விட வேகமாக பரவும் தன்மை கொண்டதாக மாற்றமடைந்து வருகிறது. இதையடுத்து தற்போது கொரோனா பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால் அனைத்து கட்டுப்பாடுகளுக்கும் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து துறைகளும் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

ஆனாலும் கொரோனா வைரஸ் பல்வேறு வகைகளில் கட்டுக்கடங்காமல் உருமாற்றம் அடைந்து வருகிறது. அந்த வகையில் சீனாவில் உள்ள மங்கோலியா என்ற பகுதியில் ஓமைக்ரான் வைரஸின் துணை மாறுபாடுகளான BA.5.1.7 மற்றும் BF.7 தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வைரஸ் பல்வேறு பகுதிகளுக்கு வேகமாக பரவி வருகிறது. மேலும் இந்த புதிய வகை தொற்றானது தடுப்பூசிகளுக்கு கட்டுப்படாது என்றும் கூறப்படுகிறது.

அதுக்குள்ள சம்பளமா.. ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு – மாநில அரசின் ஜாக்பாட் அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் இந்த புதிய வகை வைரஸானது தற்போது இந்தியாவில் கால்தடம் பதித்துள்ளது. இந்த புதிய வகை வைரஸ் குஜராத் பயோடெக்னாலஜி ஆராய்ச்சி மையத்தில் கண்டுப்பிடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வருகிற 24ம் தேதி அன்று தீபாவளி பண்டிகையானது மிகவும் பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. இதனால் இந்த புதிய வகை வைரஸ் தொற்று பரவல் மக்கள் கூட்டம் காரணமாக மேலும் அதிகரிக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதனால் தீபாவளி பண்டிகை தினத்தன்று கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளான சமூக இடைவெளியை பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!