அதுக்குள்ள சம்பளமா.. ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு – மாநில அரசின் ஜாக்பாட் அறிவிப்பு!
நாடு முழுவதும் அக்டோபர் மாதம் 24ம் தேதி தீபாவளி பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இந்த பண்டிகையை முன்னிட்டு பீகார் மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஊதியம்:
இந்தியாவில் மக்களால் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. இந்த பண்டிகையை முன்னிட்டு மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்களது ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை அறிவித்துள்ளது. அதன்படி தற்போது அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டு 38% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊழியர்கள் ஊதியம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் பென்ஷன் தொகை உயர்ந்துள்ளது. உயர்த்தப்பட்டுள்ள இந்த அகவிலைப்படியானது 2022 ஜூலை 1ம் தேதியிட்டு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
மத்திய அரசை தொடர்ந்து மாநில அரசுகளும் அகவிலைப்படியை உயர்த்த கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர். அதுமட்டுமல்ல பண்டிகை செலவுகளை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட சதவீதத்தை போனஸாக வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இன்னும் தீபாவளிக்கு 5 நாட்களே உள்ள நிலையில் பீகார் மாநில அரசு ஊழியர்களுக்கு உதவும் வகையில் இந்த மாத சம்பளத்தை முன்கூட்டியே வழங்க முடிவு செய்துள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும் அம்மாநிலத்தில் தீபாவளியை தொடர்ந்து சத் விரத பூஜை எனும் பண்டிகை 4 நாட்கள் விமர்சையாக கொண்டாடப்படும். இந்த 2 பண்டிகைகளையும் கருத்தில் கொண்டு அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த 2 வருடங்களாக கொரோனா தாக்கத்தால் தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதனால் பண்டிகை களையிழந்து காணப்பட்டது. அதனால் இந்த ஆண்டு மக்கள் தீபாவளியை உற்சாகத்துடன் கொண்டாட வரும் 20ம் தேதியே அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என்று பீகார் மாநில நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்