மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் மீண்டும் DA உயர்வு – ரூ.2 லட்சம் வரையில் சம்பள உயர்வு!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் மீண்டும் DA உயர்வு - ரூ.2 லட்சம் வரையில் சம்பள உயர்வு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் மீண்டும் DA உயர்வு - ரூ.2 லட்சம் வரையில் சம்பள உயர்வு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் மீண்டும் DA உயர்வு – ரூ.2 லட்சம் வரையில் சம்பள உயர்வு!

மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வானது வரும் ஜூலை மாதம் செலுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளமானது ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரையிலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.

அகவிலைப்படி உயர்வு:

சமீபத்தில் வெளியான செய்திகளின் படி ஜூலை மாதம், மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி (டிஏ உயர்வு) மீண்டும் 4 சதவீதம் அதிகரிக்கப்படலாம். இதனால் ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் டிஏ கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஊழியர்களுக்கு 34% டிஏ வழங்கப்பட்டு வருகிறது. புதிய உயர்வுக்குப் பிறகு 38% ஆக உயரும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. அனைத்து மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தற்போது 7வது ஊதியக் குழுவின் கீழ் 34 சதவிகிதம் DA மற்றும் DR பெறுகின்றனர்.

தமிழகத்தில் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தம்!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்த்தப்படுவதால், இப்போது ஜூலையில் புதிய அகவிலைப்படி அறிவிக்கப்படும். முதல் அதிகரிப்பு ஜனவரி முதல் ஜூன் வரையிலும், இரண்டாவது ஜூலை முதல் டிசம்பர் வரையிலும் வழங்கப்படுகிறது. அகவிலைப்படி உயர்வானது AICPI குறியீட்டின் படி தீர்மானிக்கப்படுகிறது. இறுதி 3 மாதங்களுக்கான புள்ளிவிவரங்கள் இன்னும் வரவில்லை. ஜூன் வரையிலான தகவல்கலுக்குப் பிறகு ஜூலை மாதத்தில் மத்திய அரசு அதை மறுஆய்வு செய்து, டிஏ குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன. DA 3-4 சதவிகிதம் அதிகரித்தால், அது 37% அல்லது 38% ஐத் தாண்டி 2.60 வரை சம்பளம் உயரும்.

Exams Daily Mobile App Download

இந்த முடிவால் 47 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலனைப் பெறுவார்கள். மத்திய ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியம் மற்றும் கிரேடுக்கு ஏற்ப DA கிடைக்கும். எனவே அவர்கள் சம்பளத்தை அதற்கேற்ப கணக்கிடலாம். எடுத்துக்காட்டாக ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ. 56,900 எனில், அவர்களுக்கு 38% அகவிலைப்படியில் ரூ.21,622 டிஏவாக கிடைக்கும். மேலும் சம்பளம் மாதம் ரூ.2,276 அதிகரிக்கும், அதாவது ஆண்டு சம்பளம் ரூ.27,312 அதிகரிக்கும். அதாவது மொத்த ஆண்டு DA ரூ.2,59,464 ஆக இருக்கும். மேலும், 18000 பேருக்கு மாதம் ரூ.8640 மற்றும் ஆண்டு பலன் ரூ.1,03,680 கிடைக்கும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!