தமிழகத்தில் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தம்!
தமிழகத்தில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் எழுதிய விடைத்தாள்களை வருகிற ஜூன் 1 முதல் ஜூன் 9ம் தேதிகளில் திருத்த வேண்டும். மேலும் அரியர் தேர்வு எழுதியோரின் விடைத்தாள்கள் ஜூன் 11ம் தேதியுடன் திருத்தி முடிக்கப்பட வேண்டும் எனவும் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
விடைத்தாள் திருத்தம்:
தமிழகத்தில் கடந்த 2 வருட காலமாக கொரோனா பாதிப்பின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டன. அதுமட்டுமின்றி 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 2 வருடமாக தேர்வு நடத்தப்படாத காரணத்தால் இந்த வருடம் கண்டிப்பான முறையில் தேர்வு நடத்தப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் அறிவித்திருந்தார்.
TNPSC Group 2, 2A தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!
அதன்படி, தேர்வுக்கான அட்டவணையும் அறிவிக்கப்பட்டு 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ம் தேதி தேர்வு தொடங்கி இந்த மாதம் 28ம் தேதி வரையிலும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 10ம் தேதி தொடங்கி மே 31ம் தேதியுடன் தேர்வு முடிவடைகிறது. இதன் தொடர்ச்சியாக விடைத்தாள் திருத்தும் பணியை மேற்கொள்வதற்காக அனைத்து ஏற்பாடுகளையும் தேர்வுத்துறை செய்து வருகிறது.
Exams Daily Mobile App Download
இதனால் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 5, 9, 11 மற்றும் 13ம் தேதிகளில் நடத்தப்பட்ட தேர்வுகளில் விடைத்தாள்களை அந்தந்த விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு வருகிற 28ம் தேதி அனுப்புவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் விடைத்தாள்களை திருத்துவதற்காக 40 மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இப்பணிக்காக சுமார் 20 ஆயிரம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.