மாநில அரசு ஊழியர்களுக்கு மேலும் 3% அகவிலைப்படி (DA) உயர்வு – முதல்வர் அறிவிப்பு!

0
மாநில அரசு ஊழியர்களுக்கு மேலும் 3% அகவிலைப்படி (DA) உயர்வு - முதல்வர் அறிவிப்பு!
மாநில அரசு ஊழியர்களுக்கு மேலும் 3% அகவிலைப்படி (DA) உயர்வு - முதல்வர் அறிவிப்பு!
மாநில அரசு ஊழியர்களுக்கு மேலும் 3% அகவிலைப்படி (DA) உயர்வு – முதல்வர் அறிவிப்பு!

ஒடிசா மாநில அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 2022 க்கான அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரசின் அறிவிப்பின் படி அரசு ஊழியர்களுக்கு தற்போது 3% DA உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

அகவிலைப்படி உயர்வு:

மத்திய அரசின் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 1 முதல் அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கொரோனா கால பொருளாதார சிக்கல் காரணமாக அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக மத்திய அரசு அறிவித்தது. தொடர்ந்து மூன்று தவணைகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி உயர்வு கடந்த ஜூலை 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்பட்டது. அதன்பிறகு 2021 ஜூலை தவணைக்கான DA உயர்வு 3% அளிக்கப்பட்டது. இதனால் தற்போது மத்திய அரசு ஊழியர்கள் தற்போது 31% DA பெற்று வருகிறார்கள்.

Post Office இல் 100 ரூபாய் முதல் அருமையான சேமிப்பு திட்டம் – முழு விபரங்கள் இதோ!

மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து பல மாநில அரசுகளும் அகவிலைப்படி உயர்வை அறிவிக்க தொடங்கியது. சத்தீஸ்கர், ஆந்திரா போன்ற மாநில அரசுகள் தற்போதைய காலத்திற்கான DA உயர்வையும் அறிவித்துள்ளது. மேற்கூறிய அனைத்து மாநிலங்களும் தங்கள் ஊழியர்களுக்கு 3 சதவீதம் டிஏவை உயர்த்தியுள்ளது. டிசா மாநில அரசு ஊழியர்களும் தற்போது 31% டிஏவை பெற இருக்கிறார்கள். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முதல்வரின் அறிவிப்பினால் 7.5 லட்சம் ஒடிசா மாநில அரசு ஊழியர்கள் பலனடைவார்கள்.

ஆஸ்திரேலிய ஓபனுக்கு பிறகு ஓய்வு பெறும் இந்திய வீராங்கனை சானியா மிர்ஸா – ரசிகர்கள் அதிர்ச்சி!

அகவிலைப்படி உயர்வுடன், ஊழியர்களுக்கு 30 சதவீத நிலுவைத் தொகையை வழங்கவும் மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி 2016 மற்றும் 2017ம் ஆண்டு சம்பளத்தில் மீதமுள்ள 50 சதவீதத்தை ஊழியர்கள் பெறுவார்கள். அரசின் இந்த ஒப்புதலினால் சுமார் 6 லட்சம் ஒடிசா மாநில அரசு ஊழியர்கள் பலன் அடைய உள்ளனர். புதிய 7வது ஊதியக்குழு DA ஜூலை 1, 2022 முதல் அமலுக்கு வரும் என்றும் அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒட்டு மொத்தமாக ஒடிசா அரசு ஊழியர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!