மத்திய அரசு ஊழியர்களுக்கு 2022 ஜனவரியில் DA 3% உயர்வு – 7வது ஊதியக்குழு அறிக்கை!
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி, எச்ஆர்ஏ மற்றும் ஓய்வூதிய உயர்வு போன்றவை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 2022 ஜனவரிக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
அகவிலைப்படி உயர்வு:
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வானது கடந்த 2020 முதல் நிலுவையில் வைக்கப்பட்டிருந்தது. கொரோனா இடர்பாடுகள் அனைத்தும் முடிந்த பிறகு, நிலுவை காலத்திற்கான DA உயர்வு கடந்த ஜூன் 30அளிக்கப்பட்டது. இறுதியாக 17% ஆக இருந்த DA மூன்று தவணைகளுக்கும் 11% அதிகரிக்கப்பட்டு மொத்தம் 28 % வழங்கப்பட்டது. இதன்பிறகு, தற்போதைய தவணைக்கான அகவிலைப்படி உயர்வானது 3% அதிகரிக்கப்பட்டு மொத்தம் தற்போது 31% DA பெறுகிறார்கள். இந்த உயர்வானது நவம்பர் மாத ஊதியத்தில் இருந்து அமலுக்கு வந்துள்ளது.
தமிழக அரசு வழங்கும் ரூ.50,000 உதவித்தொகை – விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரங்கள் இதோ!
தற்போது, 2022 ஜனவரியில் டிஏவை மேலும் 3% உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளி வந்துள்ளது. இதனால் ஊழியர்களின் சம்பளம் மீண்டும் பெரிய அளவில் உயரும். 2022 ஜனவரியில் DA 3% உயர்த்தப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் 20,000 ரூபாய் வரை உயரும் என்று பிரபல நாளிதழ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களின் அகவிலைப்படியை வெளியிடுவதற்கான முடிவு இன்னும் முறையாக அரசாங்கத்தால் அறிவிக்கப்படவில்லை, ஆனால் விரைவில் அறிவிப்பதற்காக வாய்ப்புகள் உள்ளது.
நாடு முழுவதும் டிச.16, 17 ஆம் தேதிகளில் வேலைநிறுத்த போராட்டம் – வங்கி ஊழியர்கள் சங்கம்!
அகவிலைப்படி உயர்வு தவிர, ஃபிட்மென்ட் காரணியையும் அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. ஃபிட்மென்ட் காரணி உயர்ந்தால், ஊழியர்களின் சம்பளமும் உயரும். மேலும், தொடர்ந்து ஊழியர்கள் வீட்டு வாடகை படியினை உயர்த்த கோரிக்கை வைக்கப்பட்டு வந்ததால், அதற்கான ஒப்புதலும் கிடைக்கும். அதற்கான கோரிக்கையை இந்திய ரயில்வே டெக்னிக்கல் சூப்பர்வைசர்ஸ் அசோசியேஷன் (ஐஆர்டிஎஸ்ஏ) மற்றும் தேசிய ரயில்வே ஃபெடரேஷன் (என்எஃப்ஐஆர்) செய்தன. இரண்டு நிறுவனங்களும் ஜனவரி 1 முதல் HRA ஐ அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.