தமிழக அரசு வழங்கும் ரூ.50,000 உதவித்தொகை – விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரங்கள் இதோ!
தமிழகத்தில் கொரோனா பெருந்நோய் தொற்றின் காரணமாக பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதனால் தமிழக அரசு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி புரியும் வகையில் ரூ. 50000 நிதி தொகையை வழங்க அரசாணை வெளியிட்டுள்ளது.
உதவித்தொகையின் விவரங்கள்
நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு உயிர் இழப்புகள் ஏற்பட்டன. இதனை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு ஊரடங்கு விதிமுறைகள் அரசு அறிவித்தது. அதில் குறிப்பாக பொது மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளே இருக்கும்படி கேட்டுக் கொண்டன. அதனை தொடர்ந்து ஏதேனும் கொரோனா தொற்றிற்கான அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அதன்பின் தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டால் 7 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்பட்டன. மேலும் கொரோனா தடுப்பூசியை அனைவரும் செலுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்பட்டன.
நாடு முழுவதும் டிச.16, 17 ஆம் தேதிகளில் வேலைநிறுத்த போராட்டம் – வங்கி ஊழியர்கள் சங்கம்!
இதனை பொதுமக்கள் அனைவரும் முறையாக கடைபிடித்து வந்தன. ஆனாலும் சிலர் முறையாக பின்பற்றாதலால் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். ஆனால் கொரோனா நோய் தொற்று பரவல் தற்போது கட்டுக்குள் வரவழைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. ஆனால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தற்போது தங்கள் பொருளாதார நிலையில் மிகவும் பின் தங்கியுள்ள நிலையில் உள்ளன. இதனை தொடர்ந்து தமிழக அரசு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி புரியும் வகையில் பல்வேறு நிதி உதவி தொகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 – பொருட்கள் கொள்முதலில் முறைகேடு?
அதில் குறிப்பாக கொரோனாவால் உயிர் இழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு ரூ.50000 வழங்கிட வேண்டும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இவ்வாறு நிதி உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. இதன்படி கொரோனாவால் உயிரிழந்த குடும்பங்களின் வாரிசுதாரர்களுக்கு எளிதான முறையில் இந்த நிதி உதவி கிடைத்திட https://www.tn.gov.in/ என்ற தமிழ்நாடு அரசு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த இணையதளத்தில் “வாட்ஸ் நியூ பகுதியில் Ex – Gratia for Covid – 19” என்னும் இணைப்பை தேர்வு செய்ய வேண்டும். அதன் பின் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்து உதவி தொகையை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.