தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 – பொருட்கள் கொள்முதலில் முறைகேடு?
தமிழகத்தில் அரசு சார்பாக ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படவுள்ள 2022ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத்தொகுப்பின் பொருட்களை கொள்முதல் செய்வதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது.
பொங்கல் பரிசுத் தொகுப்பு:
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நெருங்கி விட்டதை அடுத்து ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. ஆண்டுத்தோறும் ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவது வழக்கம். அதனுடன் பரிசுத் தொகையும் வழங்கப்படும். அதே போல இந்தாண்டும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது. ஆனால் ரொக்கத்தொகை குறித்து எந்த அறிவிப்பும் இடைபெறவில்லை. இதனால் ரேஷன் அட்டைதாரர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் வரும் டிச.25 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை? டிச.17ம் தேதி திருப்புதல் தேர்வு துவக்கம்!
இந்த நிலையில் 2022ம் ஆண்டு பொங்கல் பரிசுத்தொகுப்பாக பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கடுகு, சீரகம், மல்லி தூள், மிளகு, புளி, கோதுமை மாவு, ரவை, உப்பு, மிளகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகிய பொருள்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் 2 ,15,48,060 குடும்பங்களுக்கு பொருட்கள் வழங்கப்பட உள்ளதால் பரிசுத் தொகுப்பில் வைக்கப்படும் பொருட்களை கொள்முதல் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்தாதவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
பொங்கல் பரிசுப்பொருட்கள் கொள்முதல் செய்யும் டெண்டரில் முறைகேடுகள் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த டெண்டர் திருப்பூரை சேர்ந்த நிறுனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் 420 ரூபாய்க்கு டெண்டரை முடித்துள்ளனர். இந்த நிறுவனம் கடந்த ஆட்சியில் சுகாதாரத் துறையில் டெண்டர்களைப் பெற்று வருமான வரித்துறை சோதனைக்கு உட்பட்டது குறிப்பிடத்தக்கது. அதே நிறுவனத்திற்கு இந்த முறையும் டெண்டர் விடப்பட்டுள்ளது. இதில் 40 ரூபாய் கமிஷன் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு பொங்கல் பரிசுத்தொகுப்பிற்கு ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கு 505 ரூபாய் செலவிடப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.