தமிழகத்தில் வரும் டிச.25 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை? டிச.17ம் தேதி திருப்புதல் தேர்வு துவக்கம்!
தமிழக பள்ளி மாணவர்களுக்கு வரும் டிச.17ம் தேதி முதல் திருப்புதல் தேர்வுகளை நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் டிச.25ம் தேதி முதல் விடுமுறை விடப்படலாம் என தகவல்கள் பெறப்பட்டுள்ளது.
திருப்புதல் தேர்வு
தமிழகத்தில் கொரோனா 2ம் அலை தொற்று ஓய்ந்ததற்கு பிறகு கடந்த செப்டம்பர் மாதத்தில் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு முதல் கட்டமாக பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இதையடுத்து கடந்த நவம்பர் மாதம் 1ம் தேதியன்று 1 முதல் 8 வரையுள்ள வகுப்புகளுக்கான பள்ளிகளும் மீண்டுமாக திறக்கப்பட்டது. இப்போது 2021-22ம் கல்வியாண்டிற்கான வகுப்புகள் தாமதமாக துவங்கி இருக்கும் நிலையில் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு அவற்றின் படி தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்தாதவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
அதே நேரத்தில் ஒவ்வொரு கல்வியாண்டிலும் வழக்கமாக நடத்தப்படும் காலாண்டு தேர்வுக்கு பதிலாக, இப்போது 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் திருப்புதல் தேர்வு நடத்தப்பட்டு, மாணவர்களின் கற்றல் திறன் மதிப்பீடு செய்யப்பட்டது. இப்போது, டிசம்பர் மாதத்தில் அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் அதுவும் திருப்புதல் தேர்வாக தான் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளிக்கல்வி இணை இயக்குனர் கோபிதாஸ், ஒவ்வொரு மாவட்டத்தை சேர்ந்த முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ’10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு டிச.17ம் தேதி முதல் துவங்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த வகையில் 10ம் வகுப்புக்கு, 17ம் தேதி தமிழ், 18ல் ஆங்கிலம், 20ல் கணிதம், 21ல் விருப்பப்பாடம், 22ல் அறிவியல், 23ல் தொழிற்கல்வி மற்றும் 24ல் சமூக அறிவியல் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.
TCS நிறுவனத்தில் B.Tech பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – தகுதி, வயது வரம்பு, விண்ணப்ப முறை விளக்கம்!
அதே போல 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 17ல் தமிழ், 18ல் ஆங்கிலம், 20ல் இயற்பியல், பொருளியல், கணினி தொழில்நுட்பம், 21ல் வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல், 22ல் கணிதம், விலங்கியல், வணிகவியல், வேளாண்மை, 23ல் உயிரியல், தாவரவியல், வரலாறு, 24ல் கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், அரசியல் அறிவியல் ஆகிய தேர்வுகள் நடைபெறும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது தேர்வு முடிவடைந்த பிறகு டிச.25ம் தேதி முதல் ஜன.2ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.