தமிழக அரசு ஊழியர்களுக்கு DA உயர்வு – விரைவில் அரசு அறிவிப்பு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வு குறித்து அரசு விரைவில் அறிவிக்கும் என்றும் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் எதிர்பார்த்து வருகின்றனர்.
அகவிலைப்படி உயர்வு:
மத்திய அரசு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அரசு தனது பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் ஓய்வூதிய படிகளை 3 தவணைகளாக நிலுவையில் வைத்திருந்தது. தற்போது, நிலுவையில் அகவிலைப்படி உயர்வானது 11% உயர்த்தப்பட்டு 28% ஆக ஜூலை 1, 2021 முதல் வழங்க உத்தரவிடபட்டுள்ளது. இதனை தொடர்ந்து மற்ற மாநில அரசுகளும் அகவிலைப்படி உயர்வை வழங்க தீர்மானித்துள்ள நிலையில், தமிழக அரசும் தமிழக அரசு பணியாளர்கள் மற்றும் அரசு ஆசிரியர்களின் அகவிலைப்படியை உயர்த்தி உத்தரவிட வேண்டும் என்றும் பல தரப்புகளில் இருந்து முதல்வருக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டு உள்ளது.
கோயிலுக்கு சொந்தமான இடங்களில் வாடைக்கு வசிப்போர் கவனத்திற்கு – தமிழக அரசு உத்தரவு!
இந்நிலையில், மதுரையில் சங்க மாநில பொதுச் செயலாளர் செல்வம் அவர்கள் மத்திய அரசு கொரோனா காலத்திலும் ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தியுள்ளது. தமிழக அரசும் கொரோனா காலத்திலும் அயராது உழைத்த அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவிக்க வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17 சதவிகிதத்திலிருந்து 28 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இதேபோல், தமிழகத்திலும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 28% ஆக உயர்த்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு அடுத்த சட்டசபை கூட்டத்தில் அறிவிக்கப்படும் என்று அரசு தரப்பு தகவல் தெரிவிக்கிறது. சுமார் 18 இலட்சம் தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அதிகரிக்கப்படுவதால் அரசுக்கு ஆண்டுக்கு சுமார் 2,000 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.