கோயிலுக்கு சொந்தமான இடங்களில் வாடைக்கு வசிப்போர் கவனத்திற்கு – தமிழக அரசு உத்தரவு!
தமிழக அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களுக்கு சொந்தமான இடங்களில் வாடகைக்கு வசிப்போருக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன் முழுமையான விவரங்களை இங்கு கண்போம்.
அரசின் உத்தரவு:
தமிழகத்தில் உள்ள கோயில்கள் அனைத்தும் அரசின் அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. கோயில்களின் வருமானம் மற்றும் செலவுகள் அனைத்தும் அரசால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள திமுக அரசு பல புதிய மாற்றங்களை அறநிலையத்துறையில் செய்து வருகிறது. அந்த வகையில் இனி, தமிழகத்தில் உள்ள கோயில்களில் தமிழில் தான் அர்ச்சனை செய்யப்படும் என்றும், இதற்காக பயிற்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கப்படுவது குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி பல்கலை இணையவழி வகுப்புகள் – புதிய பாடப்பிரிவுகள் தொடக்கம்!
இது தவிர தமிழகத்தில் உள்ள 4 மலைக்கோவில்களுக்கு ரோப்கார் வசதி செய்து தரப்படும் என்றும் அரசு தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளது. இதற்கான ஆய்வு பணிகள் குறித்து தமிழக அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் செய்து வருகின்றனர். விரைவில் ரோப்கார் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. மேலும், தமிழக அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களில் கடைகள், வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
தமிழகம் முழுவதும் கோவில்களுக்கு சொந்தமான கட்டிடங்களில் வசிக்கும் வாடகைதாரர்கள் தங்களது போட்டோ மற்றும் ஆதார் உள்ளிட்ட விவரங்களை ஆகஸ்ட் 3ம் தேதிக்குள் அறநிலையத்துறைக்கு வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. கோவில் கட்டிடங்கள் மற்றும் நிலங்களில் உள்ள வாடகைத்தார்களின் விவரங்களை இணையத்தில் வெளியிட அறநிலையத்துறை முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.