தமிழக கூட்டுறவு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு – அரசின் புதிய உத்தரவு!
தமிழகத்தில் கூட்டுறவு பணியாளர்களுக்கு ஜனவரி 1ஆம் தேதி முதல் அகவிலைப்படி உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் அனைத்து மண்டல இணைப்பதிவாளர் களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அரசின் புதிய உத்தரவு:
தமிழகத்தில் தற்போது பதவி ஏற்றுள்ள முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் அனைத்து துறைகளிலும் பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். அந்த வகையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெற தகுதியுள்ள ஏனைய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 1-1-2022 முதல் 17 சதவிகிதத்திலிருந்து 31 சதவீதமாக உயர்த்தி வழங்க மு.க ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? கொரோனா பாதிப்பு அதிகரிப்பு எதிரொலி!
கடந்த 2 வருடங்களில் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஏற்பட்ட நிதி நெருக்கடி அடிப்படையில் அரசு ஊழியர்கள் மற்றும் அரசு நிதி உதவி பெறும் பொதுத் துறை பணியாளர்களுக்கும், அகவிலைப்படி உயர்வினை,அரசு ஆணை எண் 323, நாள்17.10.2019 ஆம் ஆண்டின்படி நிறுத்தி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து தற்போது கூட்டுறவு பணியாளர்களின் அகவிலைப்படி உயர்வினை 1-1-2020 முதல் 30-6-2021 வரை நிறுத்தி வைக்க பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டது.
பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படவில்லை – அமைச்சர் திடீர் அறிவிப்பு! ஊரடங்கு எதிரொலி!
இந்த சூழலில் கூட்டுறவு பணியாளர்களுக்கு ஜனவரி 1ஆம் தேதி முதல் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் அனைத்து மண்டல இணைப்பதிவாளர் களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தமிழக முதல்வரின் உத்தரவின்படி அகவிலைப்படி தொடர்பாக ஏற்கனவே பதிவாளர் அலுவலக நிர்வாக பிரிவுகளில் வழங்கியுள்ள அறிவுரையின்படி, அகவிலைப்படி வழங்கப்படுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும் மற்றும் அனைத்து கூட்டுறவு நிறுவனங்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கி கண்காணிக்க வேண்டும் என்று சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.