கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? கொரோனா பாதிப்பு அதிகரிப்பு எதிரொலி!
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவலின் தாக்கம் வேகமெடுத்து வருகிறது. இந்த நிலையில் கேரள மாநிலத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 45 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கொரோனா பரவலின் 3ம் அலை வேகமாக பரவி வருகிறது. அத்துடன் பல்வேறு மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.மேலும் தென்னாப்பிரிக்காவில் உருவான ஓமைக்ரான் தொற்று பரவலும் பல மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியுள்ளது. அதில் குறிப்பாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படவில்லை – அமைச்சர் திடீர் அறிவிப்பு! ஊரடங்கு எதிரொலி!
இதையடுத்து பல்வேறு இடங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 45 ஆயிரத்தை தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இதுவரை பதிவான கொரோனா பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 55,74,702 ஆக உள்ளது. கேரளாவில் திருவனந்தபுரம், எர்ணாகுளம், திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது
அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.30,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது..!
இங்கு கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை 51,739 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 52,97,971 ஆக உள்ளது. அத்துடன் தற்போது 2,47,227 பேர் கொரோனா பாதிப்புக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த மீண்டும் கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முகக்கவசம் அணிதல், தனிநபர் இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.