மத்திய ரயில்வே, பாதுகாப்பு அமைச்சக பணியாளர்களுக்கான DA உயர்வு – விரைவில் அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அகவிலைப்படி உயர்வு மற்றும் ஓய்வூதியம் படிகள் அனைத்தும் ஜூலை 14ம் தேதி முதல் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரயில்வே மற்றும் பாதுகாப்பு அமைச்சக ஊழியர்களுக்கான DA உயர்வு பற்றிய அறிவிப்புகள் தனியாக விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகவிலைப்படி உயர்வு:
ஜனவரி 01, 2020, ஜூலை 01, 2020 மற்றும் ஜனவரி 01, 2021 முதல் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோரின் DA மற்றும் DR உயர்வுகள் நிறுத்தி வைக்கப்பட்டது. கடைசியாக DA 17% ஆக இருந்தது. தற்போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை குழு மத்திய அரசு ஊழியர்களுக்கு DA மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு DR 28 சதவீதமாக உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் முந்தைய DA தொகையை விட இது 11% அதிகம் ஆகும். இந்த DA மற்றும் DR உயர்வு ஜூலை 1, 2021 முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
SBI வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பான், ஆதார் இணைப்பு!
தற்போது மத்திய அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்திய தணிக்கை மற்றும் கணக்கு துறையைச் சேர்ந்த நபர்களுக்கு அரசியலமைப்பின் பிரிவு 148 (5) இன் கீழ் DA உயர்வு வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகள் இந்திய செலவு கட்டுப்பாட்டாளர் மற்றும் ஆடிட்டர் ஜெனரலுடன் ஆலோசிக்கப்பட்ட பின்னர் அறிவிக்கப்படும் என்று அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அரசின் ஆணையின் படி, மத்திய செலவின அமைச்சகம் DA தொகை உயர்வு தொகையை மத்திய பாதுகாப்பது அமைச்சகம் மற்றும் ரயில்வே துறையினருக்கான தனி அறிக்கையை விரைவில் வெளியிட உள்ளது. மேலும் ரயில்வே ஊழியர்கள், பாதுகாப்பு படை ஆகியோருக்கான டிஏ உயர்வை பாதுகாப்பு அமைச்சகம், ரயில்வே அமைச்சகமும் தனித்தனி உத்தரவுகளில் அறிவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.