மத்திய அரசு ஊழியர்களுக்கு DA உயர்வு – முக்கிய அம்சங்கள் குறித்த முழு விவரம்!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு DA உயர்வு - முக்கிய அம்சங்கள் குறித்த முழு விவரம்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு DA உயர்வு - முக்கிய அம்சங்கள் குறித்த முழு விவரம்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு DA உயர்வு – முக்கிய அம்சங்கள் குறித்த முழு விவரம்!

மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி 4% உயர்த்தப்படுவதாக மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் தற்போது திருத்தப்பட்ட அகவிலைப்படி விகிதங்கள் 2022 ஜூலை 1 முதல் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகவிலைப்படி உயர்வு

நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். அந்த வகையில் கடந்த செப் 28 ஆம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்த இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையின் இந்த அறிவிப்பால், அகவிலைப்படி 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த அகவிலைப்படி குறித்து அரசு வெளியிட்ட தகவலின் படி, 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் திருத்தப்பட்ட அகவிலைப்படி அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அகவிலைப்படி உயர்வை அறிவித்ததை தொடர்ந்து 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக மார்ச் மாதம் 3% அகவிலைப்படியை மத்திய அமைச்சரவை உயர்த்தியது.

Exams Daily Mobile App Download

அதன் காரணமாக அகவிலைப்படி 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக அதிகரித்தது வழங்கப்பட்டது. தற்போது 4% உயர்வு அறிவிப்பால் 38% அகவிலைப்படி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போதைய அகவிலைப்படி உயர்வின் முக்கிய அம்சங்கள் பற்றிய விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம். அவை பின்வருமாறு,

அரசு தற்போது உயர்த்தி இருக்கும் அகவிலைப்படி தொகை மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பள கணக்கில் விரைவில் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

EPFO பயனர்களுக்கு அடிக்க போகும் ஜாக்பாட் – வெளியான சூப்பர் அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியம் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையின் கீழ், பல்வேறு நிலைகளின் படி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியரின் சம்பளத்தில் அடிப்படை ஊதியம் இன்றியமையாத பகுதியாக FR9(21) விதியின் கீழ் சம்பளமாக இருக்கிறது.

செலவினத் துறையின் அறிவிப்பின் படி, அகவிலைப்படி செலுத்துவதில் 50 பைசா அல்லது அதற்கு மேற்பட்ட தொகை முழு ரூபாயாகக் கருதப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதை விட குறைவாக இருந்தால் புறக்கணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!