EPFO பயனர்களுக்கு அடிக்க போகும் ஜாக்பாட் – வெளியான சூப்பர் அறிவிப்பு!
வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் பயனர்கள் பல மடங்கு அதிக லாபத்தில் தங்களின் ஓய்வூதிய பலன்களை அடையும் வகையில் புதிய மாற்றங்கள் வர உள்ளது. இவை குறித்து இந்த பதிவில் மேலும் அதிக தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
ஓய்வூதிய பலன்கள்:
ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையம் ஆனது ஊழியர்களின் பணிக்காலம் முடிந்த பின்னர் அவர்களின் பணிக்கால ஊதியத்திற்கு ஏற்ற வகையில் ஓய்வூதியத்தை அளிக்கிறது. ஊழியர்கள் தங்கள் ஊதியத்தில் இருந்து 12 சதவீதமும், அதே அளவிற்கு ஊழியர் பணியாற்றும் நிறுவனமும் ஊழியரின் கணக்கில் தொகையை செலுத்த வேண்டும். இந்த PF பணத்திற்கு ஆண்டிற்கு குறிப்பிட்ட சதவீதம் என்ற வகையில் வட்டியும் அளிக்கப்படுகிறது.
வருங்கால வைப்பு நிதியின் கீழ் அதிகபட்சமாக ரூ. 15,000 ஓய்வூதியமாக அளிக்கப்படுகிறது.இந்நிலையில், PF பயனர்கள் தொடர்ந்து பலமுறை தங்களின் ஓய்வூதிய நலன்களை உயர்த்துமாறு கோரிக்கை வைத்து வந்தனர். இதனை ஏற்றுக் கொண்ட EPFO அமைப்பு புதிய செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரையின் படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அக்.15 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்.. முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
Exams Daily Mobile App Download
தற்போதைய அறிவிப்பின் படி, ஓய்வூதியதாரர்கள் தங்களின் ஓய்வூதியத்தில் 300% அதிகமாக பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திட்டத்தில் மொத்தமாக 20 வருடங்கள் பணியாற்றும் ஊழியர்களுக்கு அவர்களின் பணிக்காலத்தில் 2 வருட கூடுதல் வெயிட்டேஜை பெறுவார்கள். இதன் மூலம் வருங்கால வைப்பு நிதி பயனர்கள் மிகவும் பலனடைவார்கள் என்பது உறுதியாகியுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்