அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – எவ்வளவு தெரியுமா? அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அகவிலைப்படி உயரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ஊழியர்களின் ஊதியத்தில் மிக பெரிய மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
அகவிலைப்படி:
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நிதியாண்டில் 2 முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023 – 2024 ம் நிதியாண்டில் முதல் கட்டமாக கடந்த மார்ச் அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டு 42% ஆக அதிகரிக்கப்பட்டது. உயர்த்தப்பட்ட 4% அகவிலைப்படி 2023 ஜனவரி 1ம் தேதியிட்டு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 2ம் கட்டமாக ஜூலை மாதம் அகவிலைப்படி உயர்த்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
IBPS RRB தேர்வு எழுதியோர் கவனத்திற்கு – Reserve List வெளியீடு!
இந்த முறையும் 4% அகவிலைப்படி உயர்த்தப்படலாம். இந்த அகவிலைப்படியானது 2023 ஏப்ரல் 1ம் தேதியிட்டு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. AICPI குறியீட்டை அடிப்படையாக வைத்து அகவிலைப்படி கணக்கிடப்பட்டு வருகிறது. இந்த AICPI குறியீடு குறித்த விவரங்களை மத்திய அரசு இம்மாத இறுதியில் அறிவிக்கவுள்ளது. இதன் பிறகு அகவிலைப்படி குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகும்.