மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு – கணக்கீடு இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2022ம் ஆண்டு அகவிலைப்படி 2 அல்லது 3% உயர்த்தப்படும் என்று தகவல் வந்துள்ளது. அதன்படி அகவிலைப்படி உயர்ந்தால் எவ்வளவு உயரும் என்பது குறித்து இப்பதிவில் காண்போம்.
அகவிலைப்படி:
இந்தியாவில் மத்திய அரசு தங்களது கடந்த வருடம் அகவிலைப்படி உயர்வு அளித்தது. அதன்படி 2 கட்டங்களாக ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு தற்போது 31% அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என்று வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசை தொடர்ந்து மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அளித்தது. இதனால் நாடு முழுவதும் ஏராளமான ஊழியர்களும் ஓய்வூதியர்களும் பயன் பெற்று வருகின்றனர். தமிழகத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 31% ஆக வழங்கப்பட்டுள்ளது.
அடுத்த வாரம் முதல் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் – பிரதமர் தகவல்!
மேலும் 2022ம் ஆண்டு முதல் மேலும் 3% அகவிலைப்படி உயர்த்தப்படும். இது குறித்து வெளியான தகவலின் படி தற்போது 3% அகவிலைப்படி உயர்வு அளித்தால் மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% ஆக அகவிலைப்படி உயரும். அதனை தொடர்ந்து அரசு ஊழியர்கள் சம்பள உயர்வு வேண்டி அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். 31 சதவீத அகவிலைப்படி தற்போது ரூ.5,580 வழங்கப்படுகிறது. 34 சதவீத அகவிலைப்படி ரூ.6,120 கிடைக்கும் அடிப்படை சம்பளம் ரூ.56,900 பெறும் நபர் 31 சதவீத அகவிலைப்படி ரூ.17,639 மாதம் கிடைக்கும்.
தமிழகத்தில் 10ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – நாளை முதல் சான்றிதழ் விநியோகம்!
அதே நபர் 34 சதவீத அகவிலைப்படி ரூ.19,346 கிடைக்கும். இந்த நிலையில் ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அடிப்படை ஊதியம் அதிகரிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. அதன் பிறகு சம்பள உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 7வது ஊதியக்குழு பரிந்துரையின் படி இந்த மாதமே அகவிலைப்படி மற்றும் ஊதிய உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.