மத்திய அரசின் ஊழியர்களுக்கு DA உயர்வு ஆண்டுக்கு ரூ.90,000 – 7வது ஊதியக்குழு அறிக்கை!
மத்திய அரசின் ஊழியர்களின் DA விரைவில் மூன்று சதவீதம் அதிகரிக்கலாம் என்றும், இதனால் ஆண்டுக்கு 90,000 ரூபாய் வரை பலன் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பற்றி இந்த பதிவில் காணலாம்.
அகவிலைப்படி உயர்வு:
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2022 இல் 3 சதவீத DA அதிகரிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது ஊழியர்களுக்கு 31 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருவதால், 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 34 சதவீதம் வரை உயர்த்தப்படும். இந்நிலையில், டிசம்பர் 2021க்கான ஏஐசிபிஐ தரவு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய ஊழியர்களின் சம்பளத்தில் 3 சதவீத டிஏ பலன் விரைவில் கிடைக்கும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மார்ச் மாதம் ஹோலி பண்டிகையின் போது மத்திய பணியாளர்களுக்கு இந்த உயர்வு கிடைக்கும் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாராசிட்டமால் மாத்திரைகளை உட்கொள்வோர் கவனத்திற்கு – மருத்துவ நிபுணர்களின் எச்சரிக்கை!
ஆனால், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து அரசு தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தொழிலாளர் அமைச்சகத்தின் அறிக்கையின் படி , AICPIIW டிசம்பர் 2021 இல் அதிகரித்துள்ளது. இதன் மூலம் AICPIIW 125.4 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம், ஊழியர்களின் டிஏ 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தப்படும் என நம்பப்படுகிறது. அகவிலைப்படி உதவித்தொகை அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது. அகவிலைப்படி வழக்கமாக, 6 மாதங்களுக்கு ஒருமுறை, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி அதிகரித்து வழங்கப்படும். .
பிப்.14ம் தேதி அரசு, தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை – முக்கிய அறிவிப்பு!
அகவிலைப்படி 3% அதிகரிக்கப்பட்டு ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் மாதம் ரூ.30,000 என்றால், அவருடைய சம்பளம் மாதம் ரூ.900 அதிகரிக்கும். அதாவது, ஒரு வருடத்தில் ரூ.10,800 லாபம் கிடைக்கும். அதேநேரம் அமைச்சரவை செயலாளர் மட்டத்திலான அதிகாரிகளின் சம்பளம் மாதம் 7500 ரூபாவினால் அதிகரிக்கப்படும். அதாவது, இவர்களின் ஆண்டு கணக்கை எடுத்து பார்த்தால், 90 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் பலன் கிடைக்கும்.